சினிமா தயாரிப்பாளர் கள்ளிப்பட்டி ஜோதி உடல்நலக்குறைவால் மறைவு
10/1/2022 2:40:14 AM
கோபி, செப்.30: ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள கள்ளிப்பட்டியை சேர்ந்தவர் ஜோதி (70). கள்ளிப்பட்டியை குறிப்பிட்டு, கள்ளிப்பட்டி ஜோதி என்றே திரைத்துறையினர் அழைத்தனர். இவர் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் குட்டி கோடம்பாக்கம் என்று கோபியை தமிழ் திரை உலகிற்கு முதன் முதலாக அறிமுகப்படுத்தியவர். ஆரம்ப கால கட்டத்தில் திரைத்துறையினருக்கு வெளிப்புற படப்பிடிப்பு மேலாளராக மட்டுமே பணியாற்றி வந்த கள்ளிப்பட்டி ஜோதி, சோலையம்மா, தாய்மனசு உள்ளிட்ட படங்களை தயாரித்தார்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், இயக்குநர், நடிகர் பாக்கியராஜ் நடித்த தாவணி கனவுகள், சின்னத்தம்பி உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு வெளிப்புற படப்பிடிப்பு மேலாளராகவும் பணியாற்றி வந்தார். கடந்த 2 ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த கள்ளிப்பட்டி ஜோதி உயிரிழந்தார். இவருக்கு சுதாகர் என்ற மகனும், சுஜாதா என்ற மகளும் உள்ளனர்.
மேலும் செய்திகள்
கார் மோதி இன்ஜினியர் பலி
வருவாய் துறையினர் தற்செயல் விடுப்பு போராட்டம்
ஈரோட்டில் நியோ ஐடி பார்க் தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு பாராட்டு
அரசு இசைப்பள்ளியில் தமிழிசை விழா
சிப்காட் வளாகத்திற்கு ரயில்வே தண்டவாளம்
பாசனத்துக்கு வாய்க்காலில் பாய்ந்தேடும் தண்ணீர் கழிவு நீர் செல்லும் காவிரி எழுமாத்தூர் விற்பனைக் கூடத்தில ரூ.43 லட்சத்து 97 ஆயிரத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி