SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தேனீ வளர்ப்பின் மூலம் கூடுதல் லாபம் பெறலாம்

10/1/2022 2:34:51 AM

காரைக்குடி, அக்.1: காரைக்குடி அருகே கல்லல் அ.சிறுவயல் பகுதியில் அட்மா விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.கல்லல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அழகுராஜா தலைமை வகித்து பேசுகையில், தேனீக்கள் அயல்மகரந்த சேர்க்கைக்கு உதவுகிறது. இதனால் விளைச்சல் 25 முதல் 35 சதவீதம் கூடுதலாக கிடைக்கும். தென்னையில் விளைச்சலை அதிகப்படுத்த தேனீவளர்ப்பு செய்தல் அதிக லாபத்தை ஈட்டிதரும். அடுக்குத் தேனீ இனங்களை மட்டுமே தேனீ பெட்டிகளில் வைத்து வளர்க்க முடியும். தேனீ பண்ணை அமைக்க தேர்வு செய்யும் இடம் தேனீக்களுக்கும், தேனீ வளர்ப்போருக்கும் ஏற்றதாக இருக்க வேண்டும்.

புழு அறையில் உள்ள தேன் அடைகளில் இருந்து தேனை எடுக்க கூடாது. தேனீக்கு தேவையான உணவு இருப்பு வைத்து விட்டு தேன் எடுக்க வேண்டும். காலை வேளையில் தேனடைகளை சுத்தம் செய்வது நல்லது என்றார். வேளாண் அலுவலர் பாலகணபதி, கலைஞர் திட்ட பொறுப்பு அலுவலர் காளீஸ்வரன், வட்டார தொழில்நுட்ப மேலாளர் சூர்யா உள்பட பலர் கலந்து கொண்டனர். உதவி தொழில்நுட்ப மேலாளர் குருதாஸ் செயல்முறை விளக்கம் அளித்தார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

  • cherry-blossom-tokyo

    டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!

  • baaagh11

    பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!

  • somaliya-dead-2

    சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு

  • aus-fish-21

    ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்