SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஒன்றிய குழு கூட்டம்

10/1/2022 2:34:44 AM

சிங்கம்புணரி அக். 1: சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாதாந்திர சாதாரண கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் திவ்யா பிரபு தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் லட்சுமண ராஜு முன்னிலை வகித்தார். இதில் ஒன்றிய கவுன்சிலர் உதயசூரியன் பேசும்போது எஸ் எஸ் கோட்டை ஊராட்சியில் சாலை விரிவாக்க பணிகள் காரணமாக குடிநீர் இணைப்புகள் உடைக்கப்பட்டுள்ளது. இதனால் இக்கிராம மக்கள் மூன்று மாதங்களுக்கு மேலாக தண்ணீர் இன்றி அவதிப்பட்டு வருகின்றனர்.

மேலும் சியாமுத்துப்பட்டியில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. அவற்றை துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். கவுன்சிலர் கலைச்செல்வி பேசும்போது மேலப்பட்டி பகுதியில் சுகாதார பணிகளை வாரந்தோறும் மேற்கொள்ள வேண்டும், பேசினார் இதில் துணைத் தலைவர் சரண்யா கவுன்சிலர்கள், ரம்யா, உமா, சத்தியமூர்த்தி, பெரிய கருப்பி, இளங்குமார், சசிக்குமார், மேலாளர் ஜெய அலுவலக பணியாளர்கள் பிற துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • boat-fire-philippines

    பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!

  • us-desert-train-acci-30

    அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!

  • mexico-123

    மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!

  • asssss

    ஆசியாவின் மிகப் பெரிய துலிப் மலர்த்தோட்டம்: ஸ்ரீநகரில் பார்வையாளர்களுக்கு திறப்பு

  • eartheyaa

    ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்