பரமக்குடி பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா: எம்எல்ஏ வழங்கினார்
10/1/2022 2:33:33 AM
பரமக்குடி, அக். 1: பரமக்குடி தொகுதியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை எம்எல்ஏ முருகேசன் வழங்கினார். பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பார்த்திபனூர் அரசு மேல்நிலை பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு, தலைமையாசிரியர் வேல்முருகன் தலைமை வகித்தார், நெல்மடூர் ஊராட்சி மன்ற தலைவர் சுகன்யா சதீஷ்குமார், பரமக்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, கவுன்சிலர் காளிதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் கலந்து கொண்ட பரமக்குடி எம்எல்ஏ முருகேசன் 94 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராமு,
கிளை செயலாளர் முருகவேல், மற்றும் மாரியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். காரடர்ந்தகுடி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒன்றிய செயலாளர் சக்தி தலைமையில் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழாவில் எம்எல்ஏ முருகேசன் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். நிகழ்ச்சியில், துணை செயலாளர்கள் ராமு, திலகர், பஞ்சாயத்து தலைவர் நந்தகோபால் மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கு பள்ளித் தலைமையாசிரியர் மீனாட்சிசந்தரம், முன்னிலை வகித்தார். இதில் ஆசிரியர்கள் மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
ராமநாதபுரத்தில் நடப்பாண்டில் 6 லட்சம் பனை விதைகள் நட இலக்கு: கலெக்டர் தகவல்
ஆட்டோ டிரைவரிடம் ரூ.79 ஆயிரம் மோசடி
சாயல்குடி அருகே பிள்ளையார்குளத்தில் மதநல்லிணக்க கந்தூரி திருவிழா
கடந்த 3 மாதங்களில் மீன்பிடி விதி மீறல்: 137 படகுகளுக்கு ரூ.4.50 லட்சம் அபராதம்
தசரா திருவிழாவிற்காக வேடமணிந்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
ஆபத்தான அங்கன்வாடியை அகற்ற கோரிக்கை
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!