SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டீக்கடையை அடித்து நொறுக்கி சித்தப்பாவிடம் பணம், நகை பறிப்பு

10/1/2022 2:31:42 AM

மேலூர், அக். 1: மேலூர் அருகே கொட்டகுடியை சேர்ந்தவர் பாண்டி மகன் பொன்னையன்(47). இவருக்கு 2010ல் திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். இவரது மனைவியுடன் கருத்து வேறுபாடு காரணமாக 2 வருடமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். குழந்தைகள் மனைவியுடன் அவரது தந்தை வீட்டிற்கு சென்று விட்டனர். இவர் தனியாக வீட்டின் முன்பு இவர் டீக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று பொன்னையனின் மனைவியின் சகோதரி தனத்தின் மகன் நவீன், மற்றும் 2 பேர் இவரது கடைக்கு ஒரு காரில் வந்துள்ளனர்.

பின் மூவரும் சேர்ந்த பொன்னையனை சரமாரியாக கட்டை, கம்பால் தாக்கிவிட்டு, அவர் அணிந்திருந்த 2 பவுன் செயின், கடையில் இருந்த ரூ. 30 ஆயிரம் ஆகியவற்றை எடுத்து கொண்டனர். பின் கடையில் இருந்த அனைத்து பொருட்களை அடித்து உடைத்து எறிந்து விட்டு சென்றுள்ளனர். பொன்னையன் படுகாயத்துடன் மேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, தாக்கி, பணம் பறித்து சென்றவர்களை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்