SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மேலூரில் ரூ.1.29 லட்சம் வழிப்பறி

10/1/2022 2:31:32 AM

மேலூர், அக். 1: மேலூரில் வங்கியில் இருந்து எடுத்து சென்ற ரூ. 1.29 லட்சத்தை வழிப்பறி திருடர்கள் பறித்து கொண்டு தப்பினர். மேலூரை சேர்ந்த ஜெயபிரகாஷ் மகன் சேதுராமலிங்கம்(44). இவர் நேற்று மதுரை சாலையில் உள்ள கனரா வங்கியில், நகையை அடமானம் வைத்து, ரூ. 1.79 லட்சம் வாங்கி உள்ளார். பின் ரூ. 50 ஆயிரத்தை தனியாக வைத்து கொண்டு, ரூ.1.29 லட்சத்தை தனியாக வைத்து கொண்டு, தனது டூவீலரில் மேலூர் சிவகங்கை சாலையில் சென்று கொண்டிருந்தார்.

வங்கியில் இவர் பணம் எடுத்தது முதல் கண்காணித்து கொண்டிருந்த 2 பேர், அவரை பின் தொடர்ந்து சென்று, வழிமறித்து, ரூ.1.29 லட்சத்தை பறித்து கொண்டு தப்பினர். இது குறித்து சேதுராமலிங்கம் புகாரின் பேரில், மேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

  • cherry-blossom-tokyo

    டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!

  • baaagh11

    பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!

  • somaliya-dead-2

    சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு

  • aus-fish-21

    ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்