சென்னையில் கடந்த ஓராண்டில் கஞ்சா விற்ற 635 பேரின் வங்கி கணக்கு முடக்கம்: போலீசார் நடவடிக்கை
10/1/2022 2:28:51 AM
சென்னை: சென்னை மாநகர காவல் எல்லையில் ‘போதை தடுப்புக்கான நடவடிக்கை’ என்ற பெயரில் பள்ளி மற்றும் கல்லூரிகள், பொது இடங்களில் கஞ்சா விற்பனை செய்யும் நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் கைது ெசய்து வருகின்றனர். அந்த வகையில், கடந்த 23ம் தேதி முதல் 29ம் தேதி வரை சென்னை முழுவதும் நடத்தப்பட்ட அதிரடி வேட்டையில் திரிபுரா மற்றும் ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்ததாக 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 14 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 46.58 கிலோ கஞ்சா, 8 செல்போன்கள், ஒரு பைக், ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டன. அதேநேரம், கடந்த ஒரு வாரத்தில் கைது ெசய்யப்பட்ட 30 கஞ்சா குற்றவாளிகளின் வங்கி கணக்குகள் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவுப்படி முடக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், கடந்த 2021ம் ஆண்டு முதல் 2022 செப்டம்பர் மாதம் வரை மொத்தம் கஞ்சா விற்பனை செய்ததாக 615 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1,421 குற்றவாளிகள் கைது ெசய்யப்பட்டுள்ளனர். அவர்களில் தொடர் கஞ்சா விற்பனை செய்து வந்த கஞ்சா வியாபாரிகள் உட்பட 635 குற்றவாளிகளின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள குற்றவாளிகன் வங்கி கணக்குகள் முடக்குவதற்கான பணிகளில் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
நடைபாதை ஆக்கிரமிப்பு தடுக்க கல் தூண் தடுப்புகள்
மயிலாப்பூர் திருவள்ளுவர் கோயில் ரூ.10 கோடியில் புனரமைக்கப்பட்டு ஓராண்டிற்குள் குடமுழுக்கு விழா: அமைச்சர் சேகர்பாபு உறுதி
போலி ரசீது தயாரித்து ரூ.18 லட்சம் மோசடி செய்த 2 பேர் கைது
நந்தம்பாக்கம் பகுதியில் ரூ.26.94 கோடியில் பாதாள சாக்கடை பணி: அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்
கூவம் ஆற்றுப்படுகை, மெரினாவில் ரூ.2.20 கோடியில் கேமரா: பட்ஜெட்டில் அறிவிப்பு
கேட்பாரற்று நிறுத்தப்பட்ட வாகனங்கள் பறிமுதல்
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!
சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!
அமெரிக்காவில் சாக்லெட் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து; 7 பேர் உயிரிழப்பு..!!