சிறுகனூரில் பள்ளத்தில் கவிழ்ந்த மொலாசிஸ் ஏற்றி வந்த லாரி
9/30/2022 7:02:50 AM
திருச்சி,செப்.30: பெரம்பலூர் கரும்பு ஆலையில் இருந்து 20ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உள்ள லாரியில் ஸ்பிரிட் தயாரிக்க பயன்படுத்தும் மொலாசிஸ் என்ற கழிவை லால்குடி காட்டூர் சர்க்கரை ஆலைக்கு ஒரு டேங்கர் லாரி சென்று கொண்டிருந்தது. திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூர் அருகே உள்ள லால்குடி பிரிவு சாலையில் திரும்பும்போது அருகில் இருந்த சிறு பள்ளத்தில் டேங்கர் லாரி எதிர்பாராதவிதமாக கவிழ்ந்தது. லாரியின் பழு தாங்காமல் அந்த பள்ளத்தில் இருந்த மண் சரிந்து பெரிய குழியாக மாறியதால் லாரி தலை கீழாக கவிழ்ந்து அதில் இருந்த மொலாசிஸ் அனைத்தும் அந்த பள்ளம் முழுவதும் நிரம்பியது. இதுபற்றி தகவல் அறிந்ததும் சிறுகனூர் போலீசார் விரைந்து வந்தனர்.
பிறகு நீண்ட நேரத்திற்கு பிறகு மாற்று வண்டி ஏற்பாடு செய்யப்பட்டு அந்த லாரியில் இருந்து மாற்று லாரிக்கு மோட்டார் மூலம் டேங்கில் இருந்த மொலாசிஸ்சை ஏற்றும் பணி நடைபெற்றது. அதன்பின் அங்கிருந்து புறப்பட்டு லால்குடி காட்டூர் சர்க்கரை ஆலைக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் கவிழ்ந்து கிடந்த லாரியை பொக்லைன் மூலம் மீட்கும் பணிகள் நடைபெற்றது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக லாரி நடுரோட்டில் கவிழவில்லை. தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்து இருந்தால் மொலாசிஸ் முழுவதும் சாலை முழுவதும் ஊற்றி நிலைமை மோசம் அடைந்து பெரும் விபத்துக்கள் கூட ஏற்பட்டிருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.
மேலும் செய்திகள்
ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் நான் கருத்து கூறுவது சரியாக இருக்காது
3வது வார பூச்சொரிதல் விழா சமயபுரம் கோயிலில் வாகனங்களில் சென்று மலரை குவித்த பக்தர்கள்
நலிந்த நிலையிலுள்ள முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதிய உதவித்தொகை
மணப்பாறை அருகே சூளியாப்பட்டி குளத்தில் மீன்பிடி திருவிழா
விருப்பம் உள்ளவர்கள் சேர அழைப்பு சொட்டுநீர் பாசனம் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கம்
பள்ளி, கல்லூரி அருகே போதை பொருள் விற்பவர்கள் குறித்து தகவல் அளிக்கலாம் விழிப்புணர்வு கூட்டத்தில் மாநகர காவல் ஆணையர் பேச்சு
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!