வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு அனைத்து பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல்
9/30/2022 6:53:47 AM
நெல்லை, செப். 30: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக நெல்லை மாவட்டத்தில் அனைத்து பள்ளி கட்டிடங்களையும் ஆய்வு செய்து அக்.3ம் தேதிக்குள் அறிக்கை அளிக்க கலெக்டர் விஷ்ணு உத்தரவிட்டுள்ளார். நெல்லை கலெக்டர் அலுவலக சிறு கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் கலெக்டர் விஷ்ணு தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் விஷ்ணு பேசியதாவது: நெல்லை மாவட்டத்தைப் பொருத்தவரை மணிமுத்தாறு மற்றும் பாபநாசம் அணைகளின் நீர்வரத்து அதிகரிப்பதன் காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது.
எனவே, இந்த இரு அணைகளிலும் நீர்வரத்தை முறையாக கண்காணிக்க வேண்டும். மேற்குத் தொடர்ச்சி மலையில் பொழியும் அதிகப்படியான மழைப்பொழிவு பணகுடி பகுதியில் வௌ்ள அபாயத்தை ஏற்படுத்தும். நம்பியாற்றில் ஏற்படும் வௌ்ளமும் அபாயத்தை ஏற்படுத்தும் என்பதால் இவ்விரு பகுதிகளையும் கவனமுடன் கண்காணித்திட வேண்டும். நெல்லை மாநகர பகுதிகளைப் பொருத்தவரை கடந்த பருவமழை காலத்தில் வௌ்ளம் ஏற்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து, இந்த வருட மழைக்கு முன்னதாக கால்வாய்களில் அடைப்புகள் ஏதும் காணப்பட்டால் அவற்றை சரி செய்ய வேண்டும். அனைத்து பள்ளி கட்டிடங்களையும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி பொறியாளர்கள் மற்றும் பள்ளித் தலைமையாசிரியர்களுடன் ஆய்வு செய்து ஆய்வு அறிக்கையை வரும் அக் 3ம் தேதி (திங்கட்கிழமை)க்குள் தாக்கல் செய்ய வேண்டும்.
சேதமடைந்த நிலையில் மின்கம்பங்கள் ஏதும் காணப்பட்டால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு சரி செய்ய வேண்டும். சாலைகளில் உள்ள பாலங்களின் அடியில் மழைக்காலங்களில் எவ்வித தடங்கலுமின்றி மழைநீர் வடிந்து செல்லும் வண்ணம் நெடுஞ்சாலை பொறியாளர்கள் அனைத்து பாலங்களையும், உடன் ஆய்வு செய்து போர்க்கால அடிப்படையில் சீர் செய்ய வேண்டும். பருவமழை காலத்தில் வெள்ளம் அபாயம் ஏற்படும் பட்சத்தில் உடனடியாக மீட்பு பணியை மேற்கொள்வதற்கு தீயணைப்புத்துறை, காவல்துறை உள்ளிட்ட அனைத்துதுறை அலுவலர்களும் தேவையான உபகரணங்களுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார்.
கூட்டத்தில் நெல்லை எஸ்.பி. சரவணன், மாநகர துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய செல்லையா, சேரன்மகாதேவி சப் கலெக்டர் ரிஷப், நெல்லை ஆர்டிஓ சந்திரசேகர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கணேஷ்குமார் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
மேலும் செய்திகள்
நெல்லை அறிவியல் மையத்தில் உலக வனநாள் விழா மண் வளம் மிக்க காடுகளை காப்பது அனைவரின் கடமை கலெக்டர் கார்த்திகேயன் பேச்சு
உலக தண்ணீர் தினத்தையொட்டி தச்சநல்லூரில் விழிப்புணர்வு நிகழ்ச்சி மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு
கோரிப்பள்ளத்தில் தட்டுப்பாடின்றி குடிநீர் விநியோகம் பாளை அண்ணாநகர் பூங்காவை புதுப்பிக்க வேண்டும் மாநகராட்சி குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் மனு
உலக தலைக்காய தினம், ஹெல்மெட் அணிவதன் அவசியம் நெல்லையில் விழிப்புணர்வு பைக் பேரணி
நெல்லையில் கலெக்டர் கார்த்திகேயன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
முன்னீர்பள்ளத்தில் கோயில் உண்டியல்களை உடைத்து பணம் திருட்டு
பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!
சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!
ஈக்குவடார், பெருவில் சக்தி வாய்ந்த பூகம்பம் : 15 பேர் பலி
மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!