கடத்தூரில் திமுவினர் கொண்டாட்டம்
9/30/2022 6:47:41 AM
கடத்தூர், செப்.30: தர்மரி மாவட்ட மேற்கு புதிய மாவட்ட செயலாளராக பழனியப்பன் அறிவிக்கப்பட்டார். இதையடுத்து, திமுகவினர் கடத்தூர் பஸ் ஸ்டாண்டில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். கடத்தூர் பேரூர் செயலாளர் மோகன் முன்னிலையில் மேற்கு ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசன் தலைமையில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில், பேரூராட்சித் தலைவர் கேஸ்மணி, முன்னாள் மாவட்ட துணை செயலாளர் வக்கீல் முனிராஜ், ஒன்றிய பொருளாளர் சதீஷ்குமார், வார்டு கவுன்சிலர் பச்சையப்பன், குணாகார்த்திக் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, திமுக கிளை பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
தர்மபுரி: தர்மபுரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளராக, தடங்கம் சுப்ரமணி மூன்றாவது முறையாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, இண்டூர் பஸ் ஸ்டாண்டில், திமுகவினர் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். நிகழ்ச்சிக்கு மேற்கு ஒன்றிய செயலாளர் வைகுந்தன் தலைமை வகித்தார். நல்லம்பள்ளி ஒன்றிய குழு துணைத்தலைவர் பெரியண்ணன், ஒன்றிய இளைஞரணி ராஜகோபால், நிர்வாகிகள் வேலு, சித்தன், சின்னசாமி, கிருஷ்ணன், தங்கராஜ், கன்னியப்பன், செல்ல பெருமாள், ரவி, சக்திவேல், கவி, குமார், மோகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா
நிலப்பிரச்னையில் இருதரப்பினர் மோதல்
மக்கள் குறைதீர் கூட்டத்தில் பயனாளிகளுக்கு ரூ.6.12 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
வேளாண் வணிகத்துறை சார்பில் ரூ.20 கோடியில் நவீன குளிர்பதன கிடங்கு திறப்பு
ஆதார் அட்டைகளை புதுப்பிக்க சிறப்பு முகாம்
காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!
ஆசியாவின் மிகப் பெரிய துலிப் மலர்த்தோட்டம்: ஸ்ரீநகரில் பார்வையாளர்களுக்கு திறப்பு
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி