பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தடை எதிரொலி: மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு
9/30/2022 6:33:54 AM
ஈரோடு, செப். 30: பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா மற்றும் அதன் கிளை அமைப்புகளுக்கு ஒன்றிய அரசு 5 ஆண்டு தடைவிதிப்பு எதிரொலியாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரோடு மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஈரோட்டில், காவிரி ரோடு, ஜின்னா வீதியில் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பச்சப்பாளியில் உள்ள பாஜ அலுவலகம், இந்து முன்னணி கட்சி அலுவலகம் ஆகியவற்றுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஈரோடு காளை மாட்டு சிலை, பன்னீர்செல்வம் பூங்கா, பேருந்து நிலையம், ஜிஎச் ரவுண்டானா, மேட்டூர் ரோடு, வீரப்பன் சத்திரம் கருங்கல்பாளையம் உள்பட நகரின் முக்கிய பகுதிகளிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதேபோல வழிபாட்டு தலங்களையும் போலீசார் கண்காணித்து வருகின்றனர். மேலும், சத்தியமங்கலம், தாளவாடி, கோபி, பெருந்துறை, பவானி, அந்தியூர், மொடக்குறிச்சி, கொடுமுடி உள்பட மாவட்டம் முழுவதும் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் முன்னெச்சரிக்கையாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
லாட்டரி விற்பனை : 3 பேர் கைது
பெரிய கொடிவேரியில் திமுக சார்பில் இருதய மருத்துவ முகாம்
பணம் வைத்து சூதாடிய 14 பேர் கைது
9வது நாளாக அரசின் சாதனை விளக்க கண்காட்சி
பர்னிச்சர் கடையில் பயங்கர தீ விபத்து
சாலை விபத்தில் கல்லூரி மாணவர் பலி
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!