திருமங்கலத்தில் 3,150 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
9/30/2022 1:31:32 AM
திருமங்கலம், செப். 30: திருமங்கலத்தில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்ட 3,150 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. திருமங்கலம் பெரிய கடைவீதியில் ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக மதுரை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து பெரிய கடைவீதியில் அரிசி பதுக்கி வைக்கப்பட்ட வீட்டில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்.
வீட்டில் 63 மூட்டைகளில் 50 கிலோ வீதம் 3,150 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இவற்றை பறிமுதல் செய்த போலீசார் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்த பெரிய கடைவீதியை சேர்ந்த சரவணன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
மாபெரும் கட்டுமான பொருட்கள் கண்காட்சி மதுரையில் துவக்கம் நாளை வரை நடக்கிறது
கண்மாய், கால்வாய் ஆக்கிரமிப்பாளர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
ஓடும் பேருந்தில் இருந்து இறங்க முயன்ற மாணவன் பலி
கஞ்சா விற்ற 2 பேர் கைது
முதலமைச்சரின் வாழ்க்கை பயண கண்காட்சி திருக்குறள் புத்தகங்கள் வழங்கி மாணவர்களுக்கு வரவேற்பு
மதுரை தோப்பூரில் இயற்கை தவழும் பசுமை சூழலில் காச நோயாளிகளுக்கான நவீன சிகிச்சை மையம்: புற்றுநோயாளிகள், ஆதரவற்ற மனநோயாளிகளுக்கு சிறப்பு வசதிகள்
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி