பட்டுக் கைத்தறி தொழிலுக்கு ஜிஎஸ்டி வரியை முழுவதும் ரத்து செய்ய வெண்டும்
9/29/2022 5:52:17 AM
திருவிடைமருதூர், செப். 29: பட்டுக் கைத்தறி தொழிலுக்கு ஜிஎஸ்டி வரியைமுழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் என்று திருபுவனத்தில் நடந்த சிஐடியு சங்க மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருவிடைமருதூர் அருகே திருபுவனத்தில் பட்டு மற்றும் நுால் கைத்தறி நெசவுத் தொழிலாளர் சிஐடியு சங்க மாவட்ட மாநாடு நடந்தது. மாவட்ட தலைவர் நாகேந்திரன் தலைமை வகித்தார். கவுரவ தலைவர் சந்திரன், துணைத் தலைவர்கள் ராமாச்சாரி, ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ஜெயபால் மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். சங்க செயல்பாடுகள் மற்றும் நிதிநிலை அறிக்கைகளை முறையே செயலாளர் சுப்ரமணியன், பொருளாளர் அனந்தராமன் ஆகியோர் படித்தனர். தஞ்சாவூர், அரியலுார் மாவட்ட பொறுப்பாளர்கள் துரைராஜ், கண்ணன், ஜீவபாரதி மற்றும் பலர் பேசினர்.
தற்போதைய கைத்தறி சேலை தயாரிப்பில் உள்ள நடைமுறைகளில் புதிய தொழில்நுட் பங்களை புகுத்துவது, விற்பனைக்கு ஏற்ற ரகங்களை எளிமையான முறையில் தயாரித்து நெசவுத் தொழிலாளர்களுக்கு வருமானம் கிடைக்க முயற்சி மேற்கொள்வது, அரசின் உதவி கோருவது குறித்த விவாதம் நடந்தது. கைத்தறி நெசவாளர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டம், மகாத்மா காந்தி புங்கர் பீமா திட்டம் அமல்படுத்த வேண்டும். கோரா பட்டின் விலையை கட்டுப்படுத்த வேண்டும். பட்டுக் கைத்தறி தொழிலுக்கு ஜிஎஸ்டி வரியைமுழுவதுமாக ரத்து செய்ய வெண்டும். மழைக்கால நிவாரணம் ஆண்டிற்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உட் பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும் செய்திகள்
வல்லம் பகுதிகளில் போர் வைக்கும் காலம் போனது வயலுக்குள் சென்று இயந்திரம் உருட்டும் வைக்கோல் கட்டுகள்
வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி தஞ்சாவூர் மாவட்டத்தில் 22 தாசில்தார்கள் பணியிட மாற்றம்
ஒரு கட்டு ரூ.70 வரை விற்பனை வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்க நாளை சிறப்பு முகாம்
திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் கோயிலில் நவராத்ரி விழா
ஒரத்தநாடு இலவச மருத்துவ சிறப்பு முகாமில் சிறந்த கால்நடை உரிமையாளருக்கு பரிசு
தஞ்சாவூர் மாநகராட்சியில் மாற்றி அமைக்கப்பட்ட வரி உயர்வு மக்கள் நலனுக்காக பாதியாக குறைப்பு
பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!
துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!
உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!
சீனாவில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து: 16 பேர் உயிரிழப்பு
துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 1,300-ஐ தாண்டியது..!!