கும்பகோணம் பழைய மீன் மார்க்கெட்டில் போலீசார் பாதுகாப்பு பணி
9/29/2022 5:52:09 AM
கும்பகோணம், செப். 29: கும்பகோணம் பழைய மீன் மார்க்கெட்டில் போலீசார் நேற்று தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஒன்றிய அரசின் என்.ஐ.ஏ அமைப்பு தமிழகத்தில் நடத்திய சோதனையில் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளின் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பெட்ரோல் குண்டு வீச்சு உள்ளிட்ட வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க போலீஸ் துறையினர் முடுக்கி விடப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இந்தியாவின் பிரபலமான இஸ்லாமிய அமைப்பான பி.எஃப்.ஐ கட்சி செயல்பட ஐந்து ஆண்டுகள் தடை விதித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக பி.எஃப்.ஐ அமைப்பினர் வன்முறையில் ஈடுபட வாய்ப்பு இருப்பதாக கூறி நாடு முழுவதும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பி.எஃப்.ஐ கட்சிக்கு தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து கும்பகோணம் பழைய மீன் மார்க்கெட் பகுதியில் அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கண்டன ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட வாய்ப்பு இருப்பதாக கூறி கும்பகோணம் டிஎஸ்பி அசோகன் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ்குமார், பேபி உள்ளிட்ட சுமார் 50க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று கும்பகோணம் பழைய மீன் மார்க்கெட் பகுதியில் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் காத்திருப்பை தொடர்ந்து பி.எஃப்.ஐ கட்சியை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 50க்கும் மேற்பட்டோரை கைதுசெய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். இதனால் மார்க்கெட் பகுதியில் பரபரப்பு நிலவியது.
மேலும் செய்திகள்
வல்லம் பகுதிகளில் போர் வைக்கும் காலம் போனது வயலுக்குள் சென்று இயந்திரம் உருட்டும் வைக்கோல் கட்டுகள்
வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி தஞ்சாவூர் மாவட்டத்தில் 22 தாசில்தார்கள் பணியிட மாற்றம்
ஒரு கட்டு ரூ.70 வரை விற்பனை வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்க நாளை சிறப்பு முகாம்
திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர் கோயிலில் நவராத்ரி விழா
ஒரத்தநாடு இலவச மருத்துவ சிறப்பு முகாமில் சிறந்த கால்நடை உரிமையாளருக்கு பரிசு
தஞ்சாவூர் மாநகராட்சியில் மாற்றி அமைக்கப்பட்ட வரி உயர்வு மக்கள் நலனுக்காக பாதியாக குறைப்பு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!