முத்துப்பேட்டையில் திடீர் போலீஸ் குவிப்பால் பரபரப்பு
9/29/2022 5:46:58 AM
முத்துப்பேட்டை, செப்.29: முத்துப்பேட்டையில் பிஎப்ஐ அமைப்பினர் திடீர் போராட்டம் அறிவித்ததால் நூற்றுக்கணக்கான போலீஸ் குவிக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதன் எதிரொலியாக நகரில் உள்ள அமைப்பின் நகர அலுவலகத்தில் விளம்பர போர்டு மற்றும் கொடிகளை அப்புறபடுத்தி பேரூராட்சி அருகே போராட்டம் நடைபெறும் என அந்த அமைப்பினர் அறிவித்திருந்தனர். இதனையடுத்து பேரூராட்சி அருகே திருவாரூர் ஏடிஎஸ்பி வெள்ளத்துரை, டிஎஸ்பி விவேகானந்தன், இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.
மேலும் முக்கிய இடங்களில் நூற்றுக்கணக்கான போலீசார் நிறுத்தப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இதற்கிடையே அமைப்பினர் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் இரவு வரை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில் தஞ்சை சரக டிஐஜி கயல்விழி, திருவாரூர் எஸ்பி சுரேஷ்குமார் ஆகியோர் நேற்று வந்து பல்வேறு பகுதியில் போடப்பட்டுள்ள பாதுக்காப்பு பணிகளை ஆய்வு செய்து பாதுக்காப்பை உறுதி செய்தனர். மேலும் பல்வேறு காவல்துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் செய்திகள்
திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் 36,000 ஏக்கரில் சம்பா தாளடி சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரம்: குறுவை சாகுபடி அதிகரிப்பு
பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் அமல்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி
திருவாரூர் மாவட்டத்தில் நாளை நடக்கும் கிராம சபை கூட்டத்தில் வேளாண் அலுவலர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும்
திருவாரூரில் இருந்து சேலத்திற்கு பொதுவிநியோக திட்டத்திற்கு 1,250 டன் அரிசி அனுப்பி வைப்பு
மக்களை காப்பதில் அக்கறை காட்டி பொதுசுகாதாரத்தில் அசத்தும் முத்துப்பேட்டை வட்டார மருத்துவத்துறை
மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் 10 ஆயிரம் பேர் பயன் திருவாரூர் மாவட்டத்தில் 82 ஆயிரம் குடிசை வீடுகள் கான்கிரீட் வீடுகளாக மாற்றப்படும் அமைச்சர் அர.சக்கரபாணி தகவல்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!