கறம்பக்குடி அரசு கல்லூரியில் விரிவுரையாளர்கள் நியமனம் கோரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
9/29/2022 5:46:35 AM
கறம்பக்குடி, செப்.28: கறம்பக்குடி அருகேயுள்ள அரசு கல்லூரியில் விரிவுரையாளர்கள் நியமனம் செய்யக்கோரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கறம்பக்குடி அருகே மருதன் கோன்விடுதி கிராமத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக அரசு கலை கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் பல்வேறு பாட பிரிவுகளுக்கு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. கல்லூரி அதிமுக ஆட்சியில் துவங்கப்பட்ட காலத்தில் இருந்து இக்கல்லூரிக்கு 42 விரிவுரையாளர்கள் தேவை. ஆனால் கடந்த ஆட்சியில் 2 விரிவுரையாளர்கள் மட்டுமே அரசு நியமித்தும் 17 விரிவுரையாளர்கள் தற்காலிக பணியில் வேலை பார்த்து வருகின்றனர்.
இதன் காரணமாக மாணவ, மாணவிகள் பாதித்து வருகின்றனர் என்ற அடிப்படையில் கல்லூரிக்கு வந்த மாணவ மாணவிகள் நேற்று காலை திடீரென்று வகுப்புகளை புறக்கணித்து வளாகத்திற்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து கறம்பக்குடி வருவாய் துறை துணை தாசில்தார் பழனிவேல் மற்றும் கறம்பக்குடி இன்ஸ்பெக்டர் செந்தூர்பாண்டியன் ஆகியோர் மாணவ மாணவிகளிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது 23 விரிவுரையாளர்களை உடனடியாக நியமிக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை வைத்தனர். சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி 15 நாட்களுக்குள் விரிவுரையாளர்கள் நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்க முயற்சிகள் மேற்கொள்ள படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து தர்ணா போராட்டத்தை கைவிட்டு விட்டு வகுப்புகளுக்கு சென்றனர். இச்சம்பவம் கல்லூரி வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று முதல் 55 நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் செயல்படும்
விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் தகவல் பொன்னமராவதி பேரூராட்சி பகுதியில் ரூ.84.60 லட்சம் மதிப்பில் வளர்ச்சி திட்டப்பணிகள்
கறம்பக்குடி அரசு தொடக்க பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்
பென்னமராவதி அருகே செவலூரில் குடிநீர் தொட்டி திறப்பு
புதுநகர் அரசு உயர்நிலைப்பள்ளியில் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு போட்டிகள்
நெய்வாசல்பட்டி பெரியகண்மாயில் வெள்ளத்தில் சிக்கியோரை மீட்பது எப்படி?
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!