சொத்தை மாற்றிய வழக்கு அதிமுக நிர்வாகி, 2வது மனைவிக்கு தலா 6 ஆண்டு சிறை
9/29/2022 5:42:03 AM
துவரங்குறிச்சி செப்: 29: சொத்தை மாற்றிய வழக்கில் அதிமுக நிர்வாகி, 2வது மனைவிக்கு தலா 6 ஆண்டு சிறைதண்டனை விதித்து மணப்பாறை நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த போடுவார்பட்டியை சேர்ந்தவர் சந்திரசேகர் (60). மணப்பாறை வடக்கு ஒன்றிய அதிமுக துணை செயலாளராக உள்ளார். இவரது மனைவி நிர்மலாதேவி. மாற்றுத்திறனாளியான இவர், அரசு பள்ளியில் ஆசிரியர். தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் மற்றொரு பெண்ணான நிர்மலா தேவி (இவருக்கும் அதே பெயர்) என்பவரை 2வது திருமணம் செய்தார். இவர் முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினராக உள்ளார். தம்பதி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் முதல் மனைவியான நிர்மலா தேவி தன்னுடைய மகளுடன் தனியாக வசித்து வந்தார்.
இந்நிலையில் முதல் மனைவியான ஆசிரியை நிர்மலா தேவியின் பெயரில் மணப்பாறையில் இருந்த பல லட்ச ரூபாய் மதிப்பிலான இடத்தை தனது 2வது மனைவியும் நிர்மலாதேவிக்கு மாற்றியுள்ளார். 2 மனைவிகளுக்கும் ஒரே பெயர் என்பதால் ஆள்மாறாட்டம் செய்து (2வது மனைவியை முதல் மனைவியாக காண்பித்து) சந்திரசேகர் தனது பெயருக்கு 2018ம் ஆண்டு நவம்பரில் மணப்பாறை சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரத்தை மாற்றி பதிவு செய்தார்.
இந்த மோசடி குறித்து முதல் மனைவி நிர்மலாதேவி மணப்பாறை போலீசில் புகார் அளித்தார்.
இதுகுறித்து மணப்பாறை போலீசார் சந்திரசேகர் மற்றும் அவரது 2வது மனைவி நிர்மலாதேவி ஆகியோர் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு மணப்பாறை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. சந்திரசேகர் மற்றும் அவரது இரண்டாவது மனைவி நிர்மலா தேவி மற்றும் சாட்சி கையெழுத்து போட்ட 2 பேர் என 4 பேர் மீது வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இந்த வழக்கின் இறுதி விசாரணை நேற்றுமுன்தினம் வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கருப்பசாமி, குற்றம் சாற்றப்பட்ட அதிமுக நிர்வாகி சந்திரசேகர் மற்றும் அவரது 2வது மனைவி நிர்மலா தேவி ஆகிய இருவருக்கும் தலா 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார். இந்த வழக்கில் சாட்சி கையெழுத்து போட்ட இருவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
மேலும் செய்திகள்
கடவூர் அருகே சேர்வைகாரன்பட்டியில் சிறப்பு தணிக்கை கிராமசபை கூட்டம்
தரகம்பட்டி அருகே வேப்பங்குடியில் இலவச மருத்துவ முகாம்
தினமும் மாலையில் படியுங்கள் அரசு சாதனை விளக்க கண்காட்சி தாந்தோணிமலை பிரதான சாலையில் விபத்து தடுக்க பேரிக்கார்டு வைக்க வேண்டும்
வருவாய்த்துறையினர் அதிரடி நடவடிக்கை கரூர் கிருஷ்ணராயபுரம் அருகே புகையிலை பொருட்கள் விற்ற 4 பேர் கைது
வேலாயுதம்பாளையம் அருகே கோயில் திருவிழாவில் அனுமதி இல்லாமல் ஆடல், பாடல் நிகழ்ச்சி
5 பேர் மீது வழக்கு பதிவு ரெட்டியபட்டியில் 200 மீட்டர் வடிகால் வசதி அமைக்க வேண்டும் கடவூர் ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!
சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!