உலக அளவில் ஆண்டுக்கு 7 லட்சம் பேர் தற்கொலை: துணைவேந்தர் ஜி.ரவி பேச்சு
9/29/2022 5:38:51 AM
காரைக்குடி, செப்.29: காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக சமூகவியல் துறை சார்பில் தற்கொலை தடுப்பு வாரம் அனுசரிக்கப்பட்டது. சமூகவியல் துறை பேராசிரியர் வேலுச்சாமி வரவேற்றார். துணைவேந்தர் ஜி.ரவி தலைமை வகித்து பேசுகையில், உலக சுகாதார புள்ளி விவரங்களின்படி உலகவில் ஒவ்வொரு ஆண்டும் 7 லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். 15 முதல் 29 வயதுக்கு உட்பட்டவர்களின் மரணத்திற்கான நான்காவது காரணமாக தற்கொலை இருக்கிறது. 77 சதவீத தற்கொலைகள் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ள நாடுகளில் நிகழ்ந்துள்ளது. நிதி சிக்கல்கள், உறவு முறிவுகள், நாள்பட்ட நோய் மற்றும் வலி போன்றவைகளால் ஏற்படும் மனஅழுத்தங்களை சமாளிக்கும் திறன் குறைவதால் நெருக்கடியான தருணங்களில் தற்கொலை நிகழ்வது கண்டறியப்பட்டுள்ளது.
2021 நிலவரப்படி இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான தற்கொலைகள் நடக்கும் மாநிலமாக மகாராஷ்டிராவும், அதற்கு அடுத்தபடியாக தமிழ்நாடு மற்றும் மத்தியபிரதேச மாநிலங்கள் உள்ளன. தற்கொலை என்பது வளர்ந்து வரும் சமூகப் பிரச்சனையாக உள்ளது. ஒவ்வொரு சமூகப்பணி மாணவரும் தற்கொலையைத் தடுக்கும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றார். கலைப்புல முதன்மையர் பேராசிரியர் தனுஷ்கோடி, ஆத்மா மருத்துவமனை சமூகவியல் துறை தலைவர் பிரகதீஸ்வரன், உளவியல் ஆலோசகர் லீமாதாமஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
மடப்புரம் கோயிலில் பக்தர்கள் சாமி தரிசனம்
மருத்துவத்திற்கு பயன்படுத்த, மதிப்பு கூட்டி பொருட்கள் தயாரிக்க வெற்றிலையை காப்பீடு பட்டியலில் சேர்க்க வேண்டும்: கொடிக்கால் விவசாயிகள் கோரிக்கை
காளையார்கோவிலில் எல்.ஐ.சி முகவர்கள் போராட்டம்
தேனீ வளர்ப்பின் மூலம் கூடுதல் லாபம் பெறலாம்
ஒன்றிய குழு கூட்டம்
திமுக மாவட்ட செயலாளராக அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் ஐந்தாவது முறையாக தேர்வு
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!