விபத்தில் இறந்த டிரைவர் உடலை போலீசுக்கு தெரிவிக்காமல் எரிப்பு
9/29/2022 5:27:53 AM
தர்மபுரி, செப். 29: தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த திருமல்வாடி அருகே ஈச்சம்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் மகன் பெருமாள் (19). டிராக்டர் டிரைவர். இந்நிலையில், பெருமாள் மாரண்டஹள்ளி அடுத்த ஏர்ரகுட்டஅள்ளியில் கடந்த சில வாரங்களுக்கு அரசு நிலத்தை சீர்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென நிலை தடுமாறிய டிராக்டர் கவிழ்ந்தது. இதில் டிராக்டரின் அடியில் சிக்கி பெருமாள் பரிதாபமாக உயிர் இழந்தார். ஆனால் போலீசுக்கு தகவல் தெரிவிக்காமல் உடலை, குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் எரித்துவிட்டனர். இதனிடையே இதுபற்றி சீரியம்பட்டி விஏஓ மோகனபிரியனுக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. இதுகுறித்து அவர் மாரண்டஹள்ளி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் சண்முகம் மற்றும் உறவினர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
கிரானைட் கல் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்
தென்னை மரத்தில் ஏறியவர் மின்சாரம் தாக்கி பலி
பூஜை செய்தபோது மாரடைப்பு; தொழிலாளி சாவில் திருப்பம்
ஓசஅள்ளி ஊராட்சியில் தலைமை பொறியாளர் ஆய்வு
உண்டு உறைவிடப்பள்ளி நடத்த கருத்துரு வரவேற்பு
கடலில் வீணாக செல்லும் தண்ணீரை தடுக்க ₹410 கோடியில் தென்பெண்ணை ஆறு உபரிநீர் திட்டம்
சூடுபிடித்தது ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!!
நிலநடுக்கத்தை எதிர்த்து வானுயர்ந்து நிற்கும் பொறியியல் அதிசயங்கள்
பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!
துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!
உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!