கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர் சேர்க்கை
9/29/2022 5:19:38 AM
கடலூர், செப். 29: சிதம்பரம் வட்டம் கிள்ளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் கடன் மேளா கடலூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் மூலம் நடத்தப்பட்டது.
கடலூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் மேலாண்மை இயக்குநர் மஞ்சுளா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டுறவு சங்கங்களில் 18 வயது நிரம்பியவர்கள் அனைவரும் உறுப்பினராகலாம். கூட்டுறவு கடன் சங்கங்களில் வட்டியில்லா பயிர்க்கடன் மற்றும் நகைக்கடன், கறவைமாடு கடன், சிறு பால்பண்ணை கடன் கால்நடை பராமரிப்பு கடன், மாற்றுத்திறனாளி கடன், மிக குறைந்த வட்டியில் மகளிர் சுயஉதவிக் குழு கடன், விதவைகள், ஆதரவற்ற விதவைகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் கடன் மற்றும் மாற்றுத்திறனாளி கடன் வழங்கப்படுகிறது. எனவே விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உறுப்பினராக சேர்ந்து பயனடையலாம் என விளக்கப்பட்டது. புதிய உறுப்பினர்களுக்கு உறுப்பினர் சேர்க்கை படிவம் மற்றும் புதிய கடன் வழங்கப்பட்டது. கிள்ளை கூட்டுறவு சங்க செயலாளர் வெங்கடேசன், இயக்குநர் பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
பட்டா பெயர் மாற்றம் செய்ய 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய புரோக்கர் கைது
கொலை செய்து புதைக்கப்பட்ட கல்லூரி மாணவனின் உடல் தோண்டி எடுப்பு
4 நாட்களாகியும் கொள்முதல் செய்யாததால் சர்க்கரை ஆலை நிர்வாகத்தை கண்டித்து விவசாயிகள் திடீர் சாலை மறியல்
கள்ளக்குறிச்சி தனியார் மருத்துவமனையில் பிரசவத்துக்காக சேர்க்கப்பட்ட கர்ப்பிணி சாவு கோட்டாட்சியர், போலீசார் விசாரணை
கலைஞர் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும்
ராகுல்காந்தியை நாடாளுமன்றத்திற்குள் நுழைய விடாமல் பாஜக சதி திட்டம் செய்துள்ளது
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி