நெல்லை கலெக்டர் ஆபீஸ் வளாகத்தில் இடிந்து விழுந்த கட்டிடத்தில் உள்ள அலுவலகம் இடமாற்றம்
9/28/2022 5:42:51 AM
நெல்லை, செப்.28: நெல்லை கலெக்டர் ஆபீஸ் வளாகத்தில் நூற்றாண்டு பழமையான கட்டிடம் மேற்கூரை இடிந்து விழுந்ததை தொடர்ந்து இடமாற்றம் செய்யப்பட்ட மகளிர் திட்ட அலுவலக பொருட்களை ஊழியர்கள் மாற்று இடத்துக்கு எடுத்து சென்றனர். நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள நூற்றாண்டு பழமையான கட்டிடத்தில் நீதிமன்றம், மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் முதலியன செயல்பட்டு வந்தன. இதைதொடர்ந்து புதிய கட்டிடங்கள் கட்டப்பட்ட பின் நீதிமன்றம், மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டது.
பழமையான கட்டிடத்தில் கனிம வளத்துறை, ரயில்வேக்கு நிலம் கையப்படுத்தும் அலுவலகமும் அதன்மாடியில் மகளிர் திட்ட அலுவலகமும், இ-சேவை மையம், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் அலுவலகம் ஆகியன செயல்பட்டு வந்தது.
இந்நிலையில் தற்போது பழமையான கட்டிடத்தில் மகளிர் திட்ட அலுவலகத்தின் மேற்கூறை திடீரென இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக கட்டிடத்தில் பணியாளர்கள் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. கட்டிடம் திடீரென இடிந்து விழுந்ததால் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து மகளிர் திட்ட அலுவலகம் புதிய பஸ்நிலையம் அருகே உள்ள பூமாலை வணிகவளாகத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது. இதைதொடர்ந்து மகளிர் திட்ட பணியாளர்கள் அலுவலக தளவாட பொருட்களான மேஜை, பீரோ, சேர்கள் உள்ளிட்ட பொருட்களை லாரிகளில் எடுத்து சென்றனர்.
மேலும் செய்திகள்
நெல்லை, தென்காசி மாவட்டத்தில் கூட்டுறவு ஒன்றியம் சார்பில் பால் உற்பத்தியாளர்களுக்கு நிலையான விலை வழங்கல் துணைப்பதிவாளர் தகவல்
குருவிகுளம் அருகே உமையொருபாக ஈஸ்வரன் கோயிலில் 8 மாதத்திற்குள் கும்பாபிஷேகம் ராஜா எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் சேகர்பாபு விளக்கம்
3 தினங்கள் இரவில் பேட்டை அருகேயுள்ள ரயில்வே கேட் மூடல்
அச்சங்குட்டத்தில் சர்ச் கட்ட பொதுமக்கள் கடும் எதிர்ப்பு கலெக்டர் அலுவலகத்தில் மனு
சிவகிரி அருகே செங்கல் சூளையில் மது விற்ற மேற்கு வங்க வாலிபர் கைது
களக்காடு வரதராஜபெருமாள் கோயிலில் பங்குனி பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவக்கம் திரளானோர் பங்கேற்பு
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!
ஆசியாவின் மிகப் பெரிய துலிப் மலர்த்தோட்டம்: ஸ்ரீநகரில் பார்வையாளர்களுக்கு திறப்பு
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி