நெல்லை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோ-ஆப்டெக்ஸில் ரூ.4.30 கோடி விற்பனைக்கு இலக்கு
9/28/2022 5:42:29 AM
நெல்லை, செப்.28: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நெல்லை கோ-ஆப்டெக்ஸ் மூலம் நடப்பு ஆண்டில் ரூ.4.30 கோடிக்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நெல்லை சந்திப்பு காந்திமதி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிறுவனத்தில் தீபாவளி சிறப்பு விற்பனையை நெல்லை ஆர்.டி.ஓ. சந்திரசேகர் துவக்கி வைக்க பாளை அரசு சித்த மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் சாந்த மரியா பெற்றுக் கொண்டார். பின்னர் ஆர்டிஓ சந்திரசேகர் கூறுகையில், கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு ரகங்கள், பட்டுப் புடவைகள் 30 சதவீத தள்ளுபடியில் விற்பனை செய்கிறது. நெல்லை மாவட்டத்தில் நெல்லை சந்திப்பு காந்திமதி விற்பனை நிலையம், பாளை விற்பனை நிலையம், நெல்லை டவுன் கீழரதவீதி, நெல்லை டவுன் பட்டு மாளிகை ஆகிய இடங்களில் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் அமைந்துள்ளன. நெல்லை மாவட்டத்தில் கடந்த ஆண்டு (2021) ரூ.2.73 கோடிக்கு ஜவுளி ரகங்கள் விற்பனை செய்யப்பட்டன. நடப்பு ஆண்டில் (2022) ரூ.4.30 கோடி விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் வாடிக்கையாளர்கள் வசதிக்காக `கனவு நனவு திட்டம்' என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி 10 மாத தவணைகள் வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்பட்டு 11 மற்றும் 12வது தவணை தொகையை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் செலுத்தும். முதிர்வு தொகை மூலம் 20 சதவீத தள்ளுபடியில் ஜவுளி ரகங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. எனவே வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் மூலம் ஜவுளி ரகங்களை சிறப்பு தள்ளுபடியில் பெற்று பயனடைந்து நெசவாளர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். இவ்வாறு நெல்லை ஆர்டிஓ சந்திரசேகர் கூறினார். நிகழ்ச்சியில் கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் ராஜேஷ்குமார், மேலாளர் (ரகம் மற்றும் பகிர்மானம்) அன்பரசு, காந்திமதி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை மேலாளர் ராமசுப்பிரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள், கோ ஆப்டெக்ஸ் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
நெல்லை, தென்காசி மாவட்டத்தில் கூட்டுறவு ஒன்றியம் சார்பில் பால் உற்பத்தியாளர்களுக்கு நிலையான விலை வழங்கல் துணைப்பதிவாளர் தகவல்
குருவிகுளம் அருகே உமையொருபாக ஈஸ்வரன் கோயிலில் 8 மாதத்திற்குள் கும்பாபிஷேகம் ராஜா எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் சேகர்பாபு விளக்கம்
3 தினங்கள் இரவில் பேட்டை அருகேயுள்ள ரயில்வே கேட் மூடல்
அச்சங்குட்டத்தில் சர்ச் கட்ட பொதுமக்கள் கடும் எதிர்ப்பு கலெக்டர் அலுவலகத்தில் மனு
சிவகிரி அருகே செங்கல் சூளையில் மது விற்ற மேற்கு வங்க வாலிபர் கைது
களக்காடு வரதராஜபெருமாள் கோயிலில் பங்குனி பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவக்கம் திரளானோர் பங்கேற்பு
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!