விராலிமலை அருகே புதிய பகுதி நேர நியாய விலைக்கடை திறப்பு
9/28/2022 3:02:43 AM
விராலிமலை, செப்.28: விராலிமலை அருகே பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று பகுதி நேர நியாய விலை கடையை கூட்டுறவு துறை பொது விநியோக திட்ட அமலாக்கப் பிரிவு மற்றும் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் திறந்து வைத்தனர். விராலிமலை அருகே உள்ள ராஜாளிபட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் கீழ் ராஜாளிப்பட்டியில் புதிய நியாய விலை கடை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ராஜாளிபட்டி ஊராட்சிக்குட்பட்ட முத்தகவுண்டம் பட்டியை சேர்ந்த பொதுமக்கள் நீண்ட தூரம் வந்து பொருட்கள் வாங்கி செல்லும் நிலை உள்ளதாக கூறி பொதுவிநியோக திட்ட அதிகாரிகளிடம் முத்த கவுண்டம்பட்டி கிராமத்தில் புதிய பகுதி நேர நியாய விலை கடை திறக்க கோரி கோரிக்கை மனு அளித்திருந்தனர்.
அவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்ற அதிகாரிகள் ராஜாளிபட்டியில் உள்ள நியாய விலை கடையை பிரித்து முத்தகவுண்டம்பட்டியில் புதிய பகுதி நேர நியாய விலை கடையை திறந்து வைத்தனர். இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு துறை பொது விநியோக திட்ட அமலாக்கப் பிரிவு மற்றும் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் மற்றும் ராஜாளி பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சின்னசாமி, கவுன்சிலர் முத்துலட்சுமி காளமேகம் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று முதல் 55 நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் செயல்படும்
விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் தகவல் பொன்னமராவதி பேரூராட்சி பகுதியில் ரூ.84.60 லட்சம் மதிப்பில் வளர்ச்சி திட்டப்பணிகள்
கறம்பக்குடி அரசு தொடக்க பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்
பென்னமராவதி அருகே செவலூரில் குடிநீர் தொட்டி திறப்பு
புதுநகர் அரசு உயர்நிலைப்பள்ளியில் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு போட்டிகள்
நெய்வாசல்பட்டி பெரியகண்மாயில் வெள்ளத்தில் சிக்கியோரை மீட்பது எப்படி?
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!