திருச்சியில் உடலில் அணியும் நவீன கேமராவுடன் போலீசார் வாகன தணிக்கை
9/28/2022 2:49:31 AM
திருச்சி, செப்.28: திருச்சியில் உடலில் அணியும் நவீன கேமராவுடன் போலீசார் வாகன தணிக்கையில் நேற்று ஈடுபட்டனர். திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் மாநகரத்தில் சட்டம்- ஒழுங்கை பாதுகாக்கவும், குற்ற சம்பவங்கள் ஏதும் நடைபெறா வண்ணம் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும், மக்களின் நலனை பேணிகாக்கவும், ரோந்து பணி செய்யவும், காவல்துறையினருக்கு உரிய அறிவுரை வழங்கி வருகிறார். இந்நிலையில், தமிழக அரசால் திருச்சி மாநகருக்கு 12 உடலில் அணியும் நவீன கேமிராக்கள் வழங்கப்பட்டது.(பணியின் போது சம்பவ இடத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் பதிவு செய்வது). இந்த 12 கேமராக்களை திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் உத்தரவுப்படி மாநகரத்தில் உள்ள 6 போக்குவரத்து காவல் நிலையங்களுக்கு தலா 2 வீதம் 12 வழங்கப்பட்டன.
இந்நிலையில், திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் நேற்று போக்குவரத்து போலீசார் உடலில் அணியும் நவீன கேமராவுடன் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனங்களை தடுத்து சோதனையிட்டனர். தொடர்ந்து, வாகனங்களின் ஆவணங்களை, அதன் உரிமையாளர்களிடம் போலீசார் கேட்டறிந்தனர். இந்த நிகழ்வுகள் அனைத்தும் நவீன கேமராவில் பதிவானது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
திருச்சியில் எல்ஐசி முகவர்கள் தொடர் போராட்டம்
நுகர்பொருள் வாணிபக்கழக தொழிலாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
கூட்டுறவு சிக்கன கடன் சங்க பேரவைக்கூட்டம் வரும் 9 ம்தேதி நடக்கிறது
வாழை கன்றுகளை கையில் ஏந்தி போராட்டம்: கலெக்டரிடம் கோரிக்கை
விவசாயிகள் குறைதீர் கூட்டம்; திருச்சி மாவட்டத்தில் யூரியா மற்றும் உரம் தட்டுபாடில்லாமல் வழங்க வேண்டும்
மாநகரின் 65 வார்டுகளுக்கும் புதிய சாலை மேம்பாட்டு திட்ட பணிகளுக்கு ரூ.60 கோடி நிதி ஒதுக்கீடு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!