பாளையில் 11 சப்பரங்கள் ஒரே இடத்தில் அணிவகுப்பு திரளான பக்தர்கள் தரிசனம்
9/27/2022 5:25:26 AM
நெல்லை, செப். 27: பாளையில் தசரா பண்டிகை முதல் நாளான நேற்று முன்தினம் இரவு 11 கோயில்களில் இருந்து புறப்பட்ட சப்பர வீதி உலா நேற்று காலை ஒரே இடத்தில் அணி வகுத்து நின்றது. பக்தர்கள் திரண்டு வந்து அம்மனை வழிபட்டனர். மைசூர், குலசைக்கு அடுத்தபடியாக பிரம்மாண்டமாக நடைபெறும் பாளை தசரா பண்டிகை நேற்றுமுன்தினம் தொடங்கியது. பகலில் ஆயிரத்தம்மன் கோயிலில் கொடியேற்றத்தை தொடர்ந்து இரவு ஆயிரத்தம்மன், முப்பிடாதி அம்மன், முத்தாரம்மன், வடக்கு முத்தாரம்மன், வடக்கு உசக்சிமாகாளி அம்மன், விஸ்வகர்ம உச்சினிமாகாளி அம்மன், கிழக்கு உச்சினி மாகாளி அம்மன், யாதவர் தேவி உச்சினிமாகாளி அம்மன், தேவி தூத்துவாரி அம்மன், உலகம்மன், புது உலகம்மன், ஆகிய 11 கோயில்களில் இருந்து சிம்மவாகனத்தில் அம்பாள் எழுந்தருளினார்.
இந்த சப்பரங்கள் பாளையில் உள்ள முக்கிய வீதிகளில் மேளதாளம் முழங்க விடிய விடிய உலா வந்தன. தொடர்ந்து நேற்று காலை 11 சப்பரங்களும் ஆயிரத்தம்மன் கோயில் முன்பும் தொடர்ந்து ராமசாமி கோயில் முன்பும் பின்னர் பாளை ராஜகோபாலசாமி கோயில் முன் அணிவகுத்தன. அங்கு நடந்த தீபாராதனை நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். தொடர்ந்து 10 நாட்கள் நவராத்திரி திருவிழா நடக்கிறது. சரஸ்வதி பூஜைக்கு மறுநாள் இரவு 12 சப்பரங்கள் அணிவகுப்பு நடக்க உள்ளது. இதுபோல் அன்றைய தினம் நெல்லை டவுன் பகுதியில் 35 அம்மன் கோயில்களில் இருந்து சப்பரங்கள் அணிவகுக்கும் சக்தி தரிசன நிகழ்ச்சி நடக்கிறது.
மேலும் செய்திகள்
நெல்லை, தென்காசி மாவட்டத்தில் கூட்டுறவு ஒன்றியம் சார்பில் பால் உற்பத்தியாளர்களுக்கு நிலையான விலை வழங்கல் துணைப்பதிவாளர் தகவல்
குருவிகுளம் அருகே உமையொருபாக ஈஸ்வரன் கோயிலில் 8 மாதத்திற்குள் கும்பாபிஷேகம் ராஜா எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் சேகர்பாபு விளக்கம்
3 தினங்கள் இரவில் பேட்டை அருகேயுள்ள ரயில்வே கேட் மூடல்
அச்சங்குட்டத்தில் சர்ச் கட்ட பொதுமக்கள் கடும் எதிர்ப்பு கலெக்டர் அலுவலகத்தில் மனு
சிவகிரி அருகே செங்கல் சூளையில் மது விற்ற மேற்கு வங்க வாலிபர் கைது
களக்காடு வரதராஜபெருமாள் கோயிலில் பங்குனி பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவக்கம் திரளானோர் பங்கேற்பு
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!