எளாவூர் சோதனைச்சாவடியில் 21 கிலோ கஞ்சா கடத்திய 2 பேர் கைது
9/27/2022 3:32:47 AM
கும்மிடிப்பூண்டி, செப்.27: அரசு பேருந்தில் கடத்தி வந்த 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து 2 பேரை போலீசார் கைது செய்தனர். கும்மிடிப்பூண்டி அருகே எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைசாவடி பகுதியில் நேற்று முன் தினம் இரவு ஆரம்பாக்கம் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திர மாநிலம், நெல்லூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு பேருந்தை மடக்கினர். அதில் இருந்த பயணிகளிடம் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது பின்பக்க சீட்டுக்கு அடியே மறைத்து வைத்து, 2 பைகளில் 21 கிலோ கஞ்சா கடத்தி வந்த 2 பேரை போலீசார் மடக்கிப்பிடித்தனர். விசாரணையில், மதுரையை சேர்ந்த மாசாணம் (35), பழைய தாராபுரம் ரோடு, பழனியை சேர்ந்த பரத்குமார் (28) என்பது தெரியவந்தது.இதுகுறித்து ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவுசெய்து, 2 பேரை கைது செய்தனர்.
மேலும் செய்திகள்
புழல் சிறையில் நன்னடத்தை காரணமாக 5 கைதிகள் விடுதலை
ஆவடி கமிஷனர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்; காய்கறி வியாபாரி அதிரடி கைது: பொன்னேரி போலீஸ் நடவடிக்கை
காட்டுப்பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம்: ஊராட்சி மன்ற தலைவர் தொடங்கி வைத்தார்
மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
ஆந்திராவில் இருந்து சென்னைக்கு ரயிலில் கடத்தி வந்த ₹1.75 கோடி பறிமுதல்:' ஹவாலா பணமா விசாரணை
₹12.58 லட்சத்தில் புனரமைத்து தரம் உயர்த்தப்பட்ட மாதிரி அங்கன்வாடிகள்: கலெக்டர் திறந்து வைத்தார்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!