கார் விபத்தில் 2 காவலர்கள் படுகாயம்
9/27/2022 3:28:50 AM
மாமல்லபுரம், செப். 27: மாமல்லபுரம் அருகே திருவிடந்தை கிழக்கு கடற்கரை சாலையில் நேற்றுமுன்தினம் மாமல்லபுரம் போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் மகேஷ் தலைமையில் சிறப்பு எஸ்ஐ கார்த்திகேயன் மற்றும் போலீசார், சென்னையில் இருந்து மாமல்லபுரம் நோக்கி வந்த பைக்குகளை தடுத்து நிறுத்தி, தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மாமல்லபுரம் நோக்கி வந்த கார், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக வந்தது.
அங்கு வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலீசார் மீது கார் பயங்கர சத்தத்துடன் மோதியது. இதில், போக்குவரத்து பிரிவு காவலர் யோகேஸ்வரன் (26), சிறப்பு காவல் படை வீரர் சுரேஷ்குமார் (22) ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். இருவரையும் சக போலீசார் மீட்டு, கோவளத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இப்புகாரின்பேரில், மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
மேலும் செய்திகள்
முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் ஆர்த்தி வழங்கினார்
கடுக்கலூர் கிராமத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்
காஸ் குடோன் தீவிபத்து சிகிச்சை பலனின்றி உரிமையாளர் பலி
முதல் கணவருக்கு பிறந்த குழந்தைக்கு சிகரெட்டில் சூடு வைத்து சித்ரவதை: தாய், 2வது கணவன் கைது
குன்றத்தூர் பகுதிகளில் குட்கா கடத்திய 3 பேர் கைது
காஸ் குடோன் தீ விபத்து விவகாரத்தில் ஊராட்சி மன்ற தலைவர் கைது: தலைமறைவானவர்களை தேடி வரும் போலீஸ்
சூடுபிடித்தது ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!!
நிலநடுக்கத்தை எதிர்த்து வானுயர்ந்து நிற்கும் பொறியியல் அதிசயங்கள்
பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!
துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!
உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!