ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்
9/27/2022 2:47:07 AM
மதுரை, செப். 27: தமிழ்நாடு அரசு சமூக பாதுகாப்பு துறையின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவரை தலைவராக கொண்டு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு செயல்படுகிறது. இதில் மிஷின் வட்சாலாயா திட்டத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகள், தந்தையினை இழந்த குழந்தைகள், எச்ஐவி நோயால் பாதிக்கப்பட்ட பெற்றோரின் குழந்தைகள், மிகவும் பின்தங்கிய குடும்ப பொருளாதார சூழ்நிலையில் உள்ள குழந்தைகளின் கல்வி, மருத்துவம், ஊட்டச்சத்து, பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகளுக்கு உதவித்தொகை ரூ.4 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து மதுரை கலெக்டர் அனீஷ்சேகர் விடுத்துள்ள அறிக்கையில், ‘மாவட்டத்தில் இந்த உதவித்தொகை பெறவிரும்புவோர், பெற்றோர்களின் வருமானம் நகர்புறத்தில் ரூ.96 ஆயிரமாகவும், கிராமபுறத்தில் ரூ.72 ஆயிரமாகவும் இருக்க வேண்டும்.
மதுரை மாவட்டத்தை சேர்ந்த குழந்தைகள் பள்ளி செல்லும் குழந்தைகளாகவும், குழந்தைகள் இல்லம், விடுதிகளில் தங்காமல் பெற்றோர் பாதுகாப்பில் வளரும் குழந்தைகளாகவும் இருக்க வேண்டும். உதவித்தொகை அதிகபட்சமாக 3 ஆண்டுகள் அல்லது 18 வயது முடியும் வரை வழங்கப்படும். உதவித்தொகையினை பெற உரிய ஆவணங்களை, மதுரை கலெக்டர் அலுவலகத்தில் புதிய கட்டிடத்தில் மூன்றாவது தளத்தில் இயங்கி வரும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
மதுரை மாவட்ட பள்ளி கல்வித்துறையில் ஆசிரியர் அல்லாத அலுவலர்கள்: 200 பேர் பணியிட மாற்றம்
சிறு தானியங்கள் சாகுபடி பயிற்சி முகாம்
இன்று முதல் காலாண்டு தேர்வு விடுமுறை: அக்.10, 13ல் அனைத்து பள்ளிகளும் திறப்பு
டீக்கடையை அடித்து நொறுக்கி சித்தப்பாவிடம் பணம், நகை பறிப்பு
மேலூரில் ரூ.1.29 லட்சம் வழிப்பறி
மதுப்பாட்டில்கள் பறிமுதல்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!