சிமெண்ட் சாலை, கழிவுநீர் கால்வாய் பணி துவக்கம்
9/24/2022 5:52:26 AM
ஓசூர், ெசப்.24: ஓசூரில் ₹25 லட்சம் செலவில் சிமெண்ட் சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி பூமி பூஜையுடன் துவங்கியது. ஓசூர் மாநகராட்சி 26வது வார்டுக்குட்பட்ட காளேகுண்டா பகுதி சந்திரசூடேஸ்வரர் மலைக்கோயில் அடிவாரத்தில் உள்ளது. இந்த பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் வசதியின்றி இன்றி கடும் அவதிக்குள்ளாகி வந்தனர்.
இதுகுறித்து வார்டு கவுன்சிலர் சில்பா சிவக்குமாரிடம் முறையிட்டனர். இதன்பேரில், அப்பகுதியில் ₹25 லட்சம் செலவில் சிமெண்ட் சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி பூமி பூஜையுடன் துவங்கியது. நிகழ்ச்சியில் பகுதி செயலாளர் ராஜூ, மண்டல தலைவர் புருஷோத்தமரெட்டி, முன்னாள் கவுன்சிலர்கள் பவானி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
கிரானைட் கல் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்
தென்னை மரத்தில் ஏறியவர் மின்சாரம் தாக்கி பலி
பூஜை செய்தபோது மாரடைப்பு; தொழிலாளி சாவில் திருப்பம்
ஓசஅள்ளி ஊராட்சியில் தலைமை பொறியாளர் ஆய்வு
உண்டு உறைவிடப்பள்ளி நடத்த கருத்துரு வரவேற்பு
கடலில் வீணாக செல்லும் தண்ணீரை தடுக்க ₹410 கோடியில் தென்பெண்ணை ஆறு உபரிநீர் திட்டம்
சூடுபிடித்தது ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!!
நிலநடுக்கத்தை எதிர்த்து வானுயர்ந்து நிற்கும் பொறியியல் அதிசயங்கள்
பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!
துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!
உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!