கோ-ஆப்டெக்ஸ் மூலம் தீபாவளி விற்பனைக்கு ரூ.54 லட்சம் இலக்கு: கலெக்டர் துவக்கி வைத்தார்
9/24/2022 5:44:38 AM
தேனி, செப். 24: தேனி கோ-ஆப்டெக்சில் வருகிற தீபாவளிக்கு ரூ.54 லட்சம் அளவிற்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்து, இதன் விற்பனையை நேற்று கலெக்டர் துவக்கி வைத்தார். தேனியில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி விற்பனை துவக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் கலெக்டர் முரளீதரன் கலந்து கொண்டு தீபாவளி விற்பனையை துவக்கி வைத்தார். அப்போது கலெக்டர் முரளீதரன் தெரிவித்ததாவது: தமிழக அரசு, கைத்தறி ரகங்களின் விற்பனையை அதிகரிக்க ஆண்டுதோறும் பண்டிகை காலங்களில் 30 சதவீதம் சிறப்ப தள்ளுபடி விலை அளித்து விற்பனை செய்து வருகிறது.
இதன்படி, தீபாவளி பண்டிகையையொட்டி பட்டு, பருத்தி, கைத்தறி ரகங்களுக்கு 30 சதவீத சிறப்புத் தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி பல வண்ணங்களில் பருத்தி மென்பட்டு சேலைகள், பருத்தி சேலைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள் மற்றும் நவீன காலத்திற்கு ஏற்ற ரகங்கள் தீபாவளி பண்டிகைக்காக தேனி கோஆப்டெக்சிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. தேனி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு ரூ.44 லட்சத்து 86 லட்சத்திற்கு சிறப்பு விற்பனை நடந்தது.
இவ்வாண்டு ரூ.54 லட்சத்திற்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது, என்றார். இந்நிகழ்ச்சியில் கோ-ஆப்டெக்ஸ் முதுநிலை மண்டல மேலாளர் சங்கர் , பகிர்மான மேலாளர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மேலும் செய்திகள்
தேனியில் மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது
சீட்டாடிய 6 பேர் கைது
சில்லைமரத்துப்பட்டியில் 58 ஆண்டு பழமையான நிழற்குடை அகற்றம்
கம்பத்தில் குறைகேட்பு கூட்டம்
பெரியகுளம் நகர் மன்ற கூட்டம் ஒத்திவைப்பு
பள்ளி ஆண்டு விழா
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!