கலைஞர் பிறந்தநாள் கட்டுரை, பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு: கலெக்டர் ராகுல்நாத் வழங்கினார்
9/24/2022 5:19:41 AM
செங்கல்பட்டு, செப். 24: தமிழ் வளர்ச்சி துறையின் மூலம் கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு போட்டி மற்றும் தமிழ்நாடு நாள் விழாவினை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சு போட்டிகள் நடத்தப்பெற்று போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் நேற்று வழங்கினார். செங்கல்பட்டு மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கிடையே பேச்சு போட்டி 3.6.2022 அன்றும் மற்றும் பள்ளி மாணவர்களுக்கிடையே பேச்சு போட்டி 29.7.2022 அன்றும் நடத்தி முடிக்கப்பெற்றது. மேலும், தமிழ்நாடு நாள் விழாவினை முன்னிட்டு கட்டுரை மற்றும் பேச்சு போட்டிகள் 6.7.2022 அன்று நடத்தி முடிக்கப்பெற்றது.
கலைஞர் பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில் முதல் பரிசுத்தொகை ரூ.5 ஆயிரம் மதுராந்தகம், இந்து மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவன் சு. கோகுல்தாஸ், இரண்டாம் பரிசுத்தொகை ரூ.3 ஆயிரம் பல்லாவரம், புனித தெரசா மகளிர் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி க. கவிபிரியா மற்றும் மூன்றாம் பரிசுத்தொகை ரூ.2 ஆயிரம் நந்திவரம், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி யு.யுவஸ்ரீ பெற்றுள்ளனர். மேலும், அரசு பள்ளியில் பயிலும் இரண்டு மாணவர்களுக்கு சிறப்பு பரிசாக தொகை ரூ.2 ஆயிரம் ஜமீன் பல்லாவரம், நகராட்சி மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவன் சு.சந்தோஷ் மற்றும் குண்ணங்குளத்தூர், அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி சி.ஹேமபிரியா ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில் முதல் பரிசுத்தொகை ரூ.5 ஆயிரம் வள்ளியம்மை பொறியியல் கல்லூரியை சேர்ந்த மாணவன் க.சங்கர்பாபு, இரண்டாம் பரிசுத்தொகை ரூ.3 ஆயிரம் வேல்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவன் ஜெ.பெரோஸ் ஷெரிம், மூன்றாம் பரிசுத்தொகை ரூ.2 ஆயிரம் படூர், இந்துஸ்தான் கல்லூரியை சேர்ந்த மாணவி ஜெ. ஜனனி ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
மேலும் செய்திகள்
முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் ஆர்த்தி வழங்கினார்
கடுக்கலூர் கிராமத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்
காஸ் குடோன் தீவிபத்து சிகிச்சை பலனின்றி உரிமையாளர் பலி
முதல் கணவருக்கு பிறந்த குழந்தைக்கு சிகரெட்டில் சூடு வைத்து சித்ரவதை: தாய், 2வது கணவன் கைது
குன்றத்தூர் பகுதிகளில் குட்கா கடத்திய 3 பேர் கைது
காஸ் குடோன் தீ விபத்து விவகாரத்தில் ஊராட்சி மன்ற தலைவர் கைது: தலைமறைவானவர்களை தேடி வரும் போலீஸ்
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!