பள்ளி மாணவர்களுக்கு பருவத்தேர்வு நடத்துவதில் சிக்கல்
9/24/2022 5:00:54 AM
கோவை, செப்.24: கோவையில் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு பருவத்தேர்வுகள் வரும் 26-ம் தேதி துவங்கி 30-ம் தேதி வரை நடக்கிறது. இந்த மாணவர்களுக்கு காலை, மதியம் என இரண்டு பிரிவுகளில் தேர்வு நடத்த அட்டவணை அளிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான வினாத்தாள் பள்ளிக்கு அளிக்கப்படும் என கூறப்பட்ட நிலையில், தற்போது வட்டார கல்வி அலுவலகத்தில் காலை வந்து ஆசிரியர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வட்டார கல்வி அலுவலகத்திற்கு சென்று வினாத்தாளை எடுத்து வந்து தேர்வு நடத்துவதில் சிக்கல் இருப்பதாகவும், தினம் தினமும் ஒரு தகவலை அதிகாரிகள் அளிப்பதால், தேர்வு நடத்துவது குறித்து குழப்பம் இருப்பதாகவும் ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து ஆசிரியர்கள் கூறுகையில், ”வினாத்தாளை காலையில் தினமும் அலுவலகத்தில் வந்து பெற்றுக்கொண்டு 20 கிலோ மீட்டர் தூரம் பயணித்து பள்ளிக்கு சென்று தேர்வு நடத்துவது என்பது சாத்தியம் இல்லை. முதலில் வினாத்தாள் பள்ளிக்கு அனுப்பப்படும் என தெரிவித்தனர். தற்போது, இப்படி கூறுகின்றனர். மேலும், தேர்வு தொடர்பாக எவ்விதமான முறையான தகவலை அளிக்கவில்லை. இதனால், வரும் 26-ம் தேதி தேர்வு நடக்குமா? என்ற குழப்பத்தில் உள்ளோம்” என்றனர். இது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பூபதி கூறுகையில்,”ஆசிரியர்கள் குழப்பம் அடைய தேவையில்லை. வினாத்தாள் பள்ளிக்கு கொண்டு வந்து அளிக்கப்படும். அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.
மேலும் செய்திகள்
கோவை மாநகர், கோவை தெற்கு, கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர்களாக நா.கார்த்திக், தளபதி முருகேசன், தொ.அ.ரவி தேர்வு
மேட்டுப்பாளையத்தில் கடைகளுக்குள் பெட்ரோல் குண்டு வீசிய 3 பேர் கைது
திருமணமான ஒரு மாதத்தில் வாலிபர் மாயம்
அக்டோபர் 2 மற்றும் 9ம் தேதிகளில் மது கடைகளை மூட உத்தரவு
நேரு பொறியியல் மற்றும் தொழில்நுட்பவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
கோவையில் தமிழ் உரிமை மீட்பு எழுச்சி மாநாடு
சூடுபிடித்தது ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!!
நிலநடுக்கத்தை எதிர்த்து வானுயர்ந்து நிற்கும் பொறியியல் அதிசயங்கள்
பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!
துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!
உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!