வளர்ச்சி பணியில் திருத்துறைப்பூண்டி நகராட்சி மத்திய பல்கலைக்கழகம் தேர்வு செய்த மாணவர்கள் மதிப்பெண்களை பதிவு செய்ய வேண்டும்
9/24/2022 4:44:51 AM
திருவாரூர்,செப்.24: நடப்பாண்டில் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தை தேர்வு செய்த மாணவர்கள் நாளைக்குள் தங்களது மதிப்பெண்களை பதிவு செய்து கொள்ளுமாறு பல்கலைகழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டார் நாகராஜன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, நாடு முழுவதும் இயங்கி வரும் மத்திய பல்கலை கழகத்திற்கு 2022-23ம் கல்வி ஆண்டுக்கான நுழைவுத் தேர்வுகள் தேசிய தேர்வு முகமையால் கடந்த ஜூலை மாதம் 15ம் தேதி முதல் இந்த மாதம் 11ம் தேதி வரையில் நடத்தப்பட்டு இதன் முடிவுகள் கடந்த 16ம் தேதி வெளியிடப்பட்டுள்ளன. இந்நிலையில் நடப்பாண்டில் திருவாரூர் நீலக்குடியில் இயங்கி வரும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தை தேர்வு செய்த மாணவர்கள் தங்களது கியூட் நுழைவுத் தேர்வு மதிப்பெண்களை நாளை (25ம் தேதிக்குள்) https://cutncuet.samarth.edu.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் இந்த மத்திய பல்கலைக்கழகத்தில் 5 வருட ஒருங்கிணைந்த பாடப் பிரிவாக எம்.எஸ்.சி இயற்பியல், வேதியல், கணிதம், பயோடெக்னாலஜி மற்றும் எம்.ஏ பொருளாதாரம் மற்றும் எம்.பி.ஏ மியூசிக் ஆகிய பாடப்பிரிவுகளும், இளங்கலை பாடப்பிரிவில் பி.எஸ்.சி டெக்ஸ்டைல்ஸ், டெக்னிக்கல் டெக்ஸ்டைல்ஸ் மற்றும் பி.பி.ஏ டெக்ஸ்டைல்ஸ் பிசினஸ் அனலாயிஸ்டிக் ஆகிய பாடப்பிரிவுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் விபரங்களுக்கு www.cutn.ac.in என்ற இணையதளத்தில் தகவல்களை தெரிந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுவதுடன் மாணவர் விடுதி சேவையானது முதலில் வருபவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.இவ்வாறு தேர்வு கட்டுப்பாட்டாளர் நாகராஜன் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் 36,000 ஏக்கரில் சம்பா தாளடி சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரம்: குறுவை சாகுபடி அதிகரிப்பு
பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் அமல்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி
திருவாரூர் மாவட்டத்தில் நாளை நடக்கும் கிராம சபை கூட்டத்தில் வேளாண் அலுவலர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும்
திருவாரூரில் இருந்து சேலத்திற்கு பொதுவிநியோக திட்டத்திற்கு 1,250 டன் அரிசி அனுப்பி வைப்பு
மக்களை காப்பதில் அக்கறை காட்டி பொதுசுகாதாரத்தில் அசத்தும் முத்துப்பேட்டை வட்டார மருத்துவத்துறை
மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் 10 ஆயிரம் பேர் பயன் திருவாரூர் மாவட்டத்தில் 82 ஆயிரம் குடிசை வீடுகள் கான்கிரீட் வீடுகளாக மாற்றப்படும் அமைச்சர் அர.சக்கரபாணி தகவல்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!