மணல் குவாரி திறக்க மாட்டுவண்டி தொழிலாளர்கள் சார் ஆட்சியரிடம் மனு
9/24/2022 4:09:54 AM
விருத்தாசலம், செப். 24: ஜனநாயக தொழிற்சங்க மையம் சார்பில் மாவட்ட செயலாளர் ராஜசேகர் தலைமையில் மாட்டுவண்டி தொழிலாளர்கள் நேற்று விருத்தாசலம் சார் ஆட்சியர் பழனியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில், விருத்தாசலம் வட்டத்தைச் சுற்றியுள்ள சுமார் 1500க்கும் மேற்பட்ட மாட்டு வண்டி தொழிலாளர்கள் மணல் குவாரியை நம்பி வாழ்ந்து வருகின்றனர். அரசு குவாரியை மூடி சுமார் 4 ஆண்டுகள் ஆகிறது. தற்போது மாட்டு வண்டி தொழிலாளர்கள் அனைவரும் வாழ்வாதாரத்திற்கு மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர். எனவே உடனடியாக விருத்தாசலம் வட்டத்தில் மணல் குவாரி திறக்க ஏற்பாடு செய்திட வேண்டும் என அம்மனுவில் கூறப்பட்டிருந்தது. அப்போத மாவட்ட குழு உறுப்பினர் கந்தசாமி, மணிவேல், மாவட்ட செயலாளர் ராமர், வட்டத் தலைவர் வேல்முருகன், செயலாளர் கொளஞ்சி, துணைத் தலைவர் மணிகண்டன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
மேலும் செய்திகள்
சிறையில் அடைக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கர் உண்ணாவிரதம்
ஓடும் பேருந்தில் சிறுமியிடம் சில்மிஷம் செய்த முதியவருக்கு 5 ஆண்டு சிறை
மின்துறை தனியார் மயம் கண்டித்து மாநிலம் முழுவதும் 3வது நாளாக போராட்டம் நீடிப்பு
கடலூர் மாவட்டத்துக்கு ரயில் சேவைகளை அதிகப்படுத்த வேண்டும்
திட்டக்குடி அருகே வீட்டு சுவற்றில் துளையிட்டு பல லட்சம் மதிப்புள்ள நகை, பணம், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் கொள்ளை
புதுவை அரசு பேருந்து கண்ணாடி உடைப்பு
சூடுபிடித்தது ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!!
நிலநடுக்கத்தை எதிர்த்து வானுயர்ந்து நிற்கும் பொறியியல் அதிசயங்கள்
பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!
துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!
உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!