ரத்னா மெட்ரிக்குலேசன் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
9/24/2022 4:09:16 AM
பண்ருட்டி, செப். 24: பண்ருட்டி அருகே பேர்பெரியன் குப்பம் அரசினர் மேல்நிலை பள்ளியில் மண்டல அளவிலான போட்டிகள் நடந்தது. இதில் பண்ருட்டி ரத்னா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி சார்பில் மாணவர்கள் பங்கேற்றனர்.
தொடர் ஓட்டம் லஷ்மி பிரியா, சாருமதி, கீர்த்தனா, தர்சினி ஆகிய மாணவிகள் முதலிடம் பெற்றனர். 1500 மீட்டர் பிரிவில் கவியரசு இரண்டாம் இடமும், 400 மீட்டர் பிரிவில் மதன் விஷ்வராஜ் முதலிடமும், தத்திதாவு திலில் ஹரிநாத் முதல் இடம், மதன் விஷ்வராஜ் இரண்டாம் இடம், 400 மீட்டர் தத்திதாவுதலில் முகிலன் இரண்டாம் இடம், உயரம் தாண்டுதலில் சச்சின் முதல் இடம்.
இறகு பந்து இரட்டையர் பிரிவில் வசந்தம், மீனாட்சி முதலிடம் வெற்றி பெற்று, மாவட்ட அளவில் விளையாட தகுதி பெற்றனர். மாவட்ட அளவில் நடந்த போட்டியில் நீளத்தில் ஹரிநாத், உயரம் தாண்டுதல் போட்டிகளில் முறையே ஹரிநாத் முதல் இடம், கவியரசு இரண்டாவது இடம் பிடித்து வெற்றி பெற்று மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் விளையாட தகுதி பெற்று உள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்கள், உடற்கல்வி பயிற்சியாளர்கள் கலைவாணன், தினேஷ்குமார் ஆகியோரை பள்ளி ராமகிருஷ்ணன், முதல்வர் ரவி பாராட்டி பரிசு வழங்கினர்.
மேலும் செய்திகள்
காந்தி ஜெயந்தி, மிலாடி நபி 2 நாட்கள் மதுக்கடைகளை மூட உத்தரவு
நகராட்சி அலுவலகத்தில் நுகர்வோர் பாதுகாப்பு குழுக்களின் கூட்டமைப்பு கூட்டம்
மாதர் சங்க மாநில மாநாடு மாநகராட்சி மேயர் பங்கேற்பு
விருத்தாசலத்தில் வழக்கறிஞர்கள் சங்க மாநாடு
கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர் சேர்க்கை
மங்கலம்பேட்டையில் இரு மாவட்டங்கள் சந்திக்கும் பகுதியில் போலீசார் தீவிர சோதனை
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!