இடப்பற்றாக்குறையால் அவதி அரசு பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்ட வேண்டும் பெற்றோர்கள் வேண்டுகோள்
9/23/2022 5:53:30 AM
தொண்டி,செப்.23: தொண்டி அருகேயுள்ள நம்புதாளை அரசு உயர்நிலை பள்ளியில் 500 மாணவர்கள் படித்து வருகின்றனர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு புதிய கட்டிடத்தில் பள்ளி செயல்பட ஆரம்பித்தது. புதிய கட்டிடத்தில் நான்கு வகுப்பறை மட்டுமே உள்ளன. இதில் அனைத்து மாணவ,மாணவிகளையும் வைத்திருப்பதால் கடும் சிரமம் அடைகின்றனர். இடப்பற்றாக்குறையால் நூலகம் மற்றும் ஆய்வு கூடம் கட்டிடத்திலும் மாணவர்களை வைத்து பாடம் எடுக்கின்றனர். சில வகுப்பறையில் மின்விசிறி இல்லாததால் மாணவர்கள் மேலும் சிரமம் அடைகின்றனர். கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்ட எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் தங்கள் குழந்தைகளை வேறு பள்ளியில் சேர்க்க முயற்சித்து வருகின்றனர். சில பெற்றோர்கள் சான்றிதழை வாங்கி கொண்டு வேறு பள்ளிக்கும் சென்றுள்ளனர்.
மேலும் செய்திகள்
ராமநாதபுரத்தில் நடப்பாண்டில் 6 லட்சம் பனை விதைகள் நட இலக்கு: கலெக்டர் தகவல்
பரமக்குடி பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா: எம்எல்ஏ வழங்கினார்
ஆட்டோ டிரைவரிடம் ரூ.79 ஆயிரம் மோசடி
சாயல்குடி அருகே பிள்ளையார்குளத்தில் மதநல்லிணக்க கந்தூரி திருவிழா
கடந்த 3 மாதங்களில் மீன்பிடி விதி மீறல்: 137 படகுகளுக்கு ரூ.4.50 லட்சம் அபராதம்
தசரா திருவிழாவிற்காக வேடமணிந்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!