மினிலாரியுடன் 1.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
9/22/2022 5:34:21 AM
சேலம், செப். 23: சேலம் அருகே மினிலாரியுடன் 1.5டன் ரேஷன் அரிசியை உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். சேலம் அருகே கருப்பூர், வெள்ளாளப்பட்டி, சந்தைப்பேட்டை பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக சேலம் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அப்பகுதியில் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த மினிலாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், ரேஷன் அரிசி கடத்தி வந்தது கண்டறியப்பட்டது. மினிலாரியுடன் 1.5டன் ரேஷன் அரிசியை பறிமுதுல் செய்த போலீசார், அரிசியை கடத்தி வந்த டிரைவரை பிடித்து விசாரித்தனர். அதில், சேலம் பழைய சூரமங்கலத்தை சேர்ந்த சிம்சோன்(எ) தினேஷ்(30) என்பதும், கருப்பூர் பகுதிகளில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை விலைக்கு வாங்கி, வடமாநிலத்தவர்களுக்கு அதிக விலைக்கு விற்றது தெரியவந்தது. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தினேசை கைது செய்தனர். பின்னர் அவரை சேலம் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்திகள்
15வது பொதுத்தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அறிவிப்பு சேலம் மத்திய, கிழக்கு, மேற்கு மாவட்ட திமுக செயலாளர்கள், புதிய நிர்வாகிகள்
விற்பனைக்கு குவிந்த அலங்கார தோரணங்கள்
வட்டார அளவிலான இளைஞர் திறன் திருவிழா
5டன் பூமாலைகள் அனுப்பி வைப்பு
வெல்லம் விற்பனை சுறுசுறுப்பு
மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 3.84 லட்சம் பேருக்கு சிகிச்சை
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!