கஞ்சா விற்ற 4 பேர் கைது
9/22/2022 5:28:55 AM
கிருஷ்ணகிரி, செப்.22: பர்கூர் எஸ்ஐ ரமேஷ் மற்றும் போலீசார் ஜெகினிகொள்ளை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, செங்கல் சூளை அருகே கஞ்சா விற்றுக்கொண்டிருந்த வரதராஜ்(21) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதேபோல், தேன்கனிக்கோட்டை எஸ்எஸ்ஐ நீலமேகம் மற்றும் போலீசார், பஸ் நிலையத்தில் உள்ள பெட்டிக்கடையில் சோதனை மேற்கொண்டனர். அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 60 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து நாகராஜ் என்பவரை கைது செய்தனர். கெலமங்கலம் எஸ்ஐ கார்த்திகேயன் மற்றும் போலீசார், பஸ் நிலையத்தில் பெட்டிக்கடையில் சோதனை செய்து, அங்கிருந்த 45 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கஞ்சா விற்ற ஜீவா நகரை சேர்ந்த அசோக்குமார் (23) என்பவரை கைது செய்தனர். உத்தனப்பள்ளி எஸ்ஐ பேட்ராயன் மற்றும் போலீசார் அலேசீபம் பஸ் ஸ்டாப்பில் ரோந்து சென்றபோது அங்கு கஞ்சா விற்றுக்கொண்டிருந்த பூவசரம்பட்டியைச் சேர்ந்த செல்வத்தை கைது செய்து அவரிடமிருந்து 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
மேலும் செய்திகள்
கிரானைட் கல் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்
தென்னை மரத்தில் ஏறியவர் மின்சாரம் தாக்கி பலி
பூஜை செய்தபோது மாரடைப்பு; தொழிலாளி சாவில் திருப்பம்
ஓசஅள்ளி ஊராட்சியில் தலைமை பொறியாளர் ஆய்வு
உண்டு உறைவிடப்பள்ளி நடத்த கருத்துரு வரவேற்பு
கடலில் வீணாக செல்லும் தண்ணீரை தடுக்க ₹410 கோடியில் தென்பெண்ணை ஆறு உபரிநீர் திட்டம்
சூடுபிடித்தது ஈரோடு இடைத்தேர்தல்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பிரச்சாரம்..!!
நிலநடுக்கத்தை எதிர்த்து வானுயர்ந்து நிற்கும் பொறியியல் அதிசயங்கள்
பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!
துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!
உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!