7 அம்ச கோரிக்கை வலியுறுத்தி மதுரையில் ஓய்வூதியர்கள் தர்ணா போராட்டம்
9/21/2022 5:38:10 AM
மதுரை, செப். 21: மதுரை மாவட்ட தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் அண்ணா பஸ்நிலையம் அருகே திருவள்ளுவர் சிலை பகுதியில் நேற்று தர்ணா போராட்டம் நடத்தப்பட்டது. மாவட்ட தலைவர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பால்முருகன் கோரிக்கை விளக்கவுரையாற்றினார். மாநில பொருளாளர் ஜெயச்சந்திரன் சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்ட பொருளாளர் தேவராஜன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் நீதிராஜா, டிஎன்ஆர்டிபிஏ கவுரவ தலைவர் பரமேஸ்வரன், நெடுஞ்சாலைத்துறை ஓய்வூதியர் சங்க மாநில தலைவர் திருவேங்கடராஜ் வாழ்த்தி பேசினர். போராட்டத்தில் தமிழக மற்றும் ஒன்றிய அரசுகள் 70 வயது முடிந்தோருக்கு கூடுதல் ஓய்வூதியம் 10 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டும். மருத்துவ காப்பீடு திட்ட சந்தா தொகை ரூ.497ஐ ரத்து செய்திட வேண்டும். மூத்த குடிமக்களுக்கு ரயில் பயண கட்டண சலுகையை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் மாவட்ட துணை தலைவர்கள் தங்கவேலு, சொக்கலிங்கம், ஆதரமிளகி, தினகர் சாமி, மாவட்ட இணை செயலாளர்கள் சந்திரசேகரன், நாராயணன், அடைக்கன், பானு உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாவட்ட பொருளாளர் ஜெயராமன் நன்றி கூறினார்.
மேலும் செய்திகள்
மதுரை மாவட்ட பள்ளி கல்வித்துறையில் ஆசிரியர் அல்லாத அலுவலர்கள்: 200 பேர் பணியிட மாற்றம்
சிறு தானியங்கள் சாகுபடி பயிற்சி முகாம்
இன்று முதல் காலாண்டு தேர்வு விடுமுறை: அக்.10, 13ல் அனைத்து பள்ளிகளும் திறப்பு
டீக்கடையை அடித்து நொறுக்கி சித்தப்பாவிடம் பணம், நகை பறிப்பு
மேலூரில் ரூ.1.29 லட்சம் வழிப்பறி
மதுப்பாட்டில்கள் பறிமுதல்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!