வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
9/20/2022 5:50:07 AM
திருப்பூர், செப். 20: அவிநாசி ரோடு பழங்கரையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், நேற்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில், வடக்கு வட்டார போக்குவரத்து ஆய்வாளர் தங்கராஜ் பேசியதாவது: திருத்தப்பட்ட மோட்டார் வாகனச்சட்டம்-2009 சட்டப்பிரிவு 199 (ஏ)-ன்படி உரிய ஓட்டுநர், பழகுநர் உரிமம பெறாமல் மோட்டார் வாகனங்களை ஓட்டினால் பெற்றோர் அல்லது பாதுகாவலருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் மற்றும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்.
வாகனம் 12 மாதங்களுக்கு சாலையில் ஓடுவது ரத்து செய்யப்படும். வாகனத்தை ஓட்டிய சிறுவர்கள் தங்களின் 25 வயது வரை எந்தவித ஓட்டுநர் உரிமமும் பெற இயலாது. ஆகவே, மாணவர்களாகி நீங்கள் வாகனங்களை இயக்கக்கூடாது. உங்களை போன்ற மற்ற மாணவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், என்றார். இந்நிகழ்ச்சியில் பள்ளித் தாளாளர் லட்சுமி நாராயணன், பள்ளி முதல்வர் கணேஷ், கன்ஸ்யூமர் கேர் அசோசியேஷன் தலைவர் காதர்பாட்ஷா மற்றும் பள்ளி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
ரூ.6.30 கோடி மதிப்பிலான கோயில் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
அறநிலையத்துறை அதிகாரிகள் அதிரடி: காங்கயம் அருகே துணிகரம்; ஒரே இரவில் 7 வீடுகளில் திருட்டு
பெண்ணிடம் நகை பறிக்க முயன்றவர் கைது
திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜ இளைஞரணி ஆலோசனை கூட்டம்
பஸ் கவிழ்ந்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு அமைச்சர்கள் நேரில் ஆறுதல்
ரூ.6.30 கோடி மதிப்பிலான கோயில் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!
உக்ரைனில் ஹெலிகாப்டர் விழுந்து நொருங்கியதில் உள்துறை அமைச்சர் உட்பட 16 பேர் உயிரிழப்பு..!!