மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பயிற்சி பெறும் வேற்று மாநில வனச்சரக அதிகாரிகள்
9/20/2022 5:41:41 AM
பெரியகுளம், செப். 20: உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் அந்த மாநில அரசால் நடத்தப்படும் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்பட்ட வனச்சரக அதிகாரிகளுக்கான தேர்வில் உத்தரபிரதேச மாநிலத்தில் 25 நபர்களும், மேற்கு வங்கத்தில் 24 நபர்கள் என மொத்தம் 49 வனச்சரக அதிகாரிகள் தேர்வான நிலையில் அவர்களுக்கான 18 மாத கால பயிற்சிகளை தமிழகத்தில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சியின் போது அடர்ந்த காடுகளில் வளர்க்கப்படும் மரங்களின் வகைகள் மற்றும் அவற்றின் தன்மைகள் அவற்றால் இயற்கை எவ்வாறு பாதுகாக்கப்பட்டு மழைப் பொழிவு ஏற்படுகிறது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள மண் மற்றும் பாறைகளின் தன்மை அவற்றில் அதிக அளவில் வளர்ந்து வரும் இயற்கை மரங்கள் மற்றும் அரசால் வளர்க்கப்படும் மரங்கள் அவற்றின் தன்மை குறித்து பயிற்சியும் விளக்கமும் தமிழக வனத்துறையில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற டாக்டர் பாரதி, வெளி மாநில வனச்சரக அதிகாரிகளுக்கு பயிற்சியும் கொடுத்து வருகின்றார்.
மேலும் செய்திகள்
கேரளாவில் கூடுதல் அபராதம் கம்பத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்
சோத்துப்பாறை அணை பாசன நீர் திறக்கும் முன் வாய்க்கால்களில் உடைப்பை சீரமைக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை
வண்டிப்பெரியாறில் பஸ், லாரி மோதிய விபத்தில் 25 பேர் காயம்
இரு சிறுமிகள் பலியான விவகாரம்: பண்ணைப்புரம் செயல் அலுவலர், பொறியாளர் சஸ்பெண்ட்
வனவிலங்குகள் பட்டியலில் இருந்து காட்டுப்பன்றியை நீக்க வேண்டும்: குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை
கண்டமனூரில் குடிநீர் தட்டுப்பாடு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!