லண்டன் சென்று திரும்பிய திமுக எம்எல்ஏக்களுக்கு வரவேற்பு
9/20/2022 5:41:21 AM
ஆண்டிபட்டி, செப். 20: முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய கர்னல் ஜான் பென்னிகுயிக் சிலையை இங்கிலாந்து நாட்டில் தமிழக அரசு சார்பில் நிறுவப்பட்டு திறக்கப்பட்ட நிகழ்ச்சிக்கு சென்றிருந்த கம்பம் எம்எல்ஏ ராமகிருஷ்ணன் மற்றும் ஆண்டிபட்டி எம்எல்ஏ மகாராஜன் நேற்று ஆண்டிபட்டி பகுதிக்கு வந்த நிலையில் திமுக கட்சி நிர்வாகிகள் சிறப்பாக வரவேற்பு அளித்தனர். ஆங்கிலேய பொறியாளரான கர்னல் ஜான் பென்னிகுயிக் சிலையை அவரது சொந்த ஊரான இங்கிலாந்து நாட்டின் கேம்பர்ளி நகரி மைய பூங்காவில் நிறுவப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்த நிலையில், கடந்த 12ம் தேதி இங்கிலாந்து நாட்டின் பென்னிகுயிக் சிலை திறக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்க்காக தேனி மாவட்டம் தெற்கு மாவட்டத்தில் இருந்து மாவட்ட பொறுப்பாளர் கம்பம் எம்எல்ஏ ராமகிருஷ்ணன் மற்றும் ஆண்டிபட்டி எம்எல்ஏ மகாராஜன் மற்றும் வடக்கு மாவட்டம் சார்பாக மாவட்ட பொறுப்பாளர் தங்கதமிழ்ச்செல்வன், பெரியகுளம் எம்எல்ஏ சரவணக்குமார் ஆகியோர் சென்றிருந்தார். இதில் கடந்த 12ம் தேதி சிலை திறக்கப்பட்ட நிலையில், நேற்று மாலை கம்பம் எம்எல்ஏ ராமகிருஷ்ணன் மற்றும் ஆண்டிபட்டி எம்எல்ஏ மகாராஜன் ஆண்டிபட்டிக்கு வந்தனர். இவர்களை திமுக கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் எம்எல்ஏ மகாராஜன் குடும்பத்தினர் அவர்களுக்கு ஆரத்தி எடுத்தும் வரவேற்றனர். இதில் ஆண்டிபட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம், நகரச் செயலாளர் சரவணன் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
கேரளாவில் கூடுதல் அபராதம் கம்பத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்
சோத்துப்பாறை அணை பாசன நீர் திறக்கும் முன் வாய்க்கால்களில் உடைப்பை சீரமைக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை
வண்டிப்பெரியாறில் பஸ், லாரி மோதிய விபத்தில் 25 பேர் காயம்
இரு சிறுமிகள் பலியான விவகாரம்: பண்ணைப்புரம் செயல் அலுவலர், பொறியாளர் சஸ்பெண்ட்
வனவிலங்குகள் பட்டியலில் இருந்து காட்டுப்பன்றியை நீக்க வேண்டும்: குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை
கண்டமனூரில் குடிநீர் தட்டுப்பாடு
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!