அரியலூரில் எல்ஐசி முகவர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
9/13/2022 6:01:45 AM
அரியலூர் செப் 13:அகில இந்திய எல்ஐசி முகவர்கள் சங்கத்தினர் அரியலூரில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரியலூரில் அகில இந்திய எல்ஐசி முகவர்கள் சங்கம் (லிகாய்) சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி,அரியலூர் எல்ஐசி கிளை அலுவலகம் முன்பு கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. எல்ஐசி முகவர்கள் சங்கத்தின் (லிகாய்) அரியலூர் கிளை தலைவர் நீலமேகம், ஜெயங்கொண்டம் கிளை தலைவர் ஆறுமுகம் ஆகியோர் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்தனர். இதில் ராஜேந்திரன்,கணபதி, சிவக்குமார்உள்ளிட்ட எல்ஐசி கிளைகளின் லிகாய் முகவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்ட இக் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் உள்ளிட்டவை மீது ஒன்றிய அரசு அதிகமாக விதித்துள்ள வரிகளை உடனே வாபஸ் பெற வேண்டும்.
ஐ.ஆர்.டி.ஏ அமைப்பு, எல்.ஐ.சி முகவர்களின் கமிஷன் குறைப்பு நடவடிக்கையை உடனே வாபஸ் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எல்ஐசி முகவர்கள் சங்க மாநில செயலாளர் ராஜா பேசினார்.இந்நிகழ்வில் சிஐடியு மாவட்ட செயலாளர் துரைசாமி,லிகாய் அமைப்பின் தஞ்சை கோட்ட செயற்குழு உறுப்பினர் அருமைகண்ணு,மாவட்டத் தலைவர் பாலசுப்பிரமணியன்,மாவட்ட செயலாளர் முருகானந்தம்,கோட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.ஆர்ப்பாட்ட முடிவில்அரியலூர் கிளை பொருளாளர் செல்வராஜ் நன்றி கூறினார்.
மேலும் செய்திகள்
மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30,000 இழப்பீடு வழங்க வேண்டும்
விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தல் காந்திஜெயந்தி, மிலாடிநபி அக்.2, 9ம்தேதி மதுக்கடைகள் இயங்காது
சான்றிதழுக்கு விண்ணப்பிக்க பொது இ-சேவை மையங்களை பொதுமக்கள் அணுகலாம்
அரியலூர் மாவட்டத்தில் மதுக்கடைகளுக்கு 2, 9ம்தேதி விடுமுறை
அரியலூர் மாவட்டத்தில் நாளை நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் மக்கள் பங்கேற்க அழைப்பு
பெரம்பலூர் நகராட்சி அலுவலர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!