அரசியல் கட்சியினருக்கு ஆர்டிஓ வேண்டுகோள் பெரம்பலூரில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் 13ம் தேதி நடக்கிறது
9/10/2022 2:46:39 AM
பெரம்பலூர்,செப்.10: பெரம்பலூரில் வரும் 13ம்தேதி மின் நுகர்வோர்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது என்று பெரம்பலூர் கோட்ட செயற்பொறியாளர் அசோக்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்தின் கீழுள்ள பெரம்பலூர் மின் கோட்டத்திற்கு உட்பட்ட நுகர்வோர்களின் குறைகளை தீர்க்கும் வகையில், பெரம்பலூர் 4 ரோடு அருகேயுள்ள, மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில், வருகிற 13ம்தேதி காலை11.30 மணி முதல் பகல் 1 மணி வரை, தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெரம்பலூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வைப் பொறியாளர் அம்பிகா தலைமையில், மின் நுகர்வோர்களின் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பெரம்பலூர் கோட்டத்திற்கு உட்பட்ட மின்நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என பெரம்பலூர் கோட்டசெயற்பொறியாளர் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
ஜெயங்கொண்டத்தில் குழாய் உடைந்து சாலையில் வீணாகும் குடிநீர்
குன்னம் அடுத்த எழுமூர் கிராமத்தில் நீர் வழித்தட ஆக்கிரமிப்புகள் அகற்றம்
புதுவேட்டக்குடி கிராமத்தில் அடிப்படை வசதி கோரி மக்கள் சாலை மறியல்
.பழூர் அரசு பள்ளியில் விடுமுறையில் ஆர்வமுடன் வந்து தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள்
பாலுக்கு விலையை உயர்த்தி வழங்க கோரி பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன் பாலை தரையில் கொட்டி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பெரம்பலூர் மாவட்டத்தில் ரம்ஜான் நோன்பு துவக்கம்
சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!
அமெரிக்காவில் சாக்லெட் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து; 7 பேர் உயிரிழப்பு..!!
வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்