ஈரோட்டில் எல்ஐசி முகவர்கள் ஆர்ப்பாட்டம்
9/7/2022 2:44:13 AM
ஈரோடு, செப். 7: அகில இந்திய அளவிலான முகவர்கள் சங்கங்களின் கூட்டு குழு இணைந்து இன்சூரன்ஸ் வாரவிழா புறக்கணிப்பு போராட்டத்தை கடந்த 1ம் தேதி முதல் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நேற்று ஈரோடு பவானி சாலையில் உள்ள வடக்கு எல்.ஐ.சி, அலுவலகம் முன் எல்.ஐ.சி, முகவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்பாட்டத்தில் பாலிசிக்கான போனஸ் தொகையை உயர்த்த வேண்டும். பாலிசி கடனுக்கான வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும், வெளிநாடு பாலிசி தாரர்களுக்கு ஏதுவான சேவை அளிக்க வேண்டும். முகவர்களுக்கு பணி கொடையை ரூ.20 லட்சமாக உயர்த்த வேண்டும். மருத்துவ குழு காப்பீடு அனைத்து முகவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். குழு காப்பீடு வயது வரம்பு மற்றும் தொகையை உயர்த்த வேண்டும். முகவாண்மை குழு காப்பீடு உயர்த்தப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்திற்கு கிளை தலைவர் மோகன் தலைமை தாங்கினார்.ஆர்பாட்டத்தில் 2 பெண்கள் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட முகவர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
ஈரோடு தெற்கு, வடக்கு மாவட்ட திமுக செயலாளர்களாக முத்துசாமி, நல்லசிவம் தேர்வு
பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தடை எதிரொலி: மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு
சென்னிமலை அருகே ஈங்கூர் மேம்பாலத்தில் டிப்பர் லாரிகள் நேருக்கு நேர் மோதி கவிழ்ந்தது
சினிமா தயாரிப்பாளர் கள்ளிப்பட்டி ஜோதி உடல்நலக்குறைவால் மறைவு
மொடக்குறிச்சியில் 250 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா
பவானி வட்டாரத்தில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!