கரூர் சணப்பிரட்டி ரயில்வே நிலைய குகை வழிப்பாதையில் மழையால் தேங்கிய தண்ணீர்
9/6/2022 6:16:01 AM
கருர், செப்.6: கரூர் சணப்பிரட்டி ரயில்வே நிலைய குகை வழிப்பாதையில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்ற வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் சணப்பிரட்டி அருகே திருச்சி தண்டவாளப் பாதை குறுக்கிடுகிறது. சணப்பிரட்டியில் இருந்து அமராவதி ஆற்றங்கரையோர கிராமங்களுக்கு சாலை பிரிகிறது. இந்த சாலையில் அதிகளவு வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, ரயில் செல்லும் போது நீண்ட நேரம் நிற்கும் நிலை இந்த பகுதியினர்களுக்கு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரயில்வே பாதையின் அருகே குகை வழிப்பாதை அமைத்து தரப்பட்டுள்ளது. தற்போது, அனைத்து தரப்பினர்களும் குகை வழியின் வழியாக சென்று வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக குகைவழிப்பாதையில் அதிகளவு தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் எளிதாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே, குகை வழிப்பாதையில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்றுவதோடு, தண்ணீர் தேங்காத வகையில் தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
நகராட்சி, பேரூராட்சி எம்பிசி மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை
தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை மாநில பொதுக்குழு கூட்டம்
கரூர் மாநகராட்சி சார்பில் மக்கும் குப்பையில் இருந்து நுண்ணுயிர் கலவை உரம் தயாரிப்பு
விவசாயிகளுக்கு இலவசமாக வினியோகம் திருவள்ளுவர் மைதானபகுதியில் கொட்டப்பட்டுள்ள கட்டிட இடிபாடுகளை அப்புறப்படுத்த கோரிக்கை
பிழைப்பிற்காக ஊர் ஊராக செல்லும் கூடை முடையும் தொழிலாளர்கள்
சொத்தை மாற்றிய வழக்கு அதிமுக நிர்வாகி, 2வது மனைவிக்கு தலா 6 ஆண்டு சிறை
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!