1100 மாணவ-மாணவிகள் பங்கேற்பு உடுமலையில் ரத்த தான முகாம்
9/6/2022 6:12:58 AM
உடுமலை,செப்.6: உடுமலை நகராட்சி திருமண மண்டபத்தில் இலவச ரத்த தான முகாம் மற்றும் விழிப்புணர்வு, பரிசோதனை முகாம் நேற்று முன்தினம் நடந்தது.கோவை கங்கா மருத்துவமனை, கோவை மெட்ரோபாலிஸ் ரோட்டரி சங்கம், உடுமலை தேஜஸ் ரோட்டரி சங்கம், பொள்ளாச்சி ஏ.நாகூர் பிரேஷிதா மருத்துவமனை, உடுமலை அரசு மருத்துவமனை ரத்த வங்கி, புனித செபஸ்தியார் ஆலயம், ஜிவிஜி விசாலாட்சி மகளிர் கல்லூரி, உடுமலை நேசக்கரங்கள் ஆகியவை சார்பில் இந்த முகாம் நடந்தது. இதில் 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களின் மார்பக புற்றுநோயை கண்டறிந்து முற்றிலும் இலவசமாக சிகிச்சை அளித்தல், சர்க்கரை நோயால் வரும் பாத பிரச்னைகளை கண்டுபிடித்து கால் துண்டித்தலை தடுத்தல், அறுவை சிகிச்சை செய்தல், நீரிழிவுக்கு இலவச சிகிச்சை அளித்தல் ஆகியவை மேற்கொள்ளப்பட்டன.
மேலும் செய்திகள்
ரூ.6.30 கோடி மதிப்பிலான கோயில் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
அறநிலையத்துறை அதிகாரிகள் அதிரடி: காங்கயம் அருகே துணிகரம்; ஒரே இரவில் 7 வீடுகளில் திருட்டு
பெண்ணிடம் நகை பறிக்க முயன்றவர் கைது
திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜ இளைஞரணி ஆலோசனை கூட்டம்
பஸ் கவிழ்ந்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு அமைச்சர்கள் நேரில் ஆறுதல்
ரூ.6.30 கோடி மதிப்பிலான கோயில் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!