புளியஞ்சோலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு நீர் வரத்து அதிகரிப்பால் நிரம்பி வழியும் ஜம்பேரி
9/3/2022 3:25:52 AM
துறையூர், செப். 3: துறையூர் அருகே உப்பிலியபுரம் ஒன்றியத்தில் உள்ள வைரிச்செட்டிப்பாளையம் ஜம்பேரி நிரம்பி வழிகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
தென்மேற்கு பருவமழை பல மாவட்டங்களில் பெய்து வருகிறது இந்நிலையில் கொல்லி மலையில் கடந்த சில தினங்களாகவே மழை பெய்து வருகிறது புளியஞ்சோலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கடந்த 4 நாட்களாக ஜம்பேரிக்கு நீர்வரத்து வந்து கொண்டிருந்தது . ஜம்பேரி முழு கொள்ளளவை அடைந்து நிரம்பி வழிந்தது. திருச்சி மாவட்டத்தில் பெரிய ஏரியான ஜம்பேரி சுமார் 400 ஏக்கர் ஏக்கர் பரப்பளவு கொண்டது .இந்த ஏரி நிரம்பி உபரி நீர் மாராடி, உப்பிலியபுரம், வெங்கடாசலபுரம் ஆகிய கிராமங்களில் உள்ள ஏரிகளுக்கு செல்கிறது .இந்த ஏரியின் உபரி நீரால் சுமார் 20 ஆயிரம் ஏக்கருக்கு மேல் விளைநிலங்களில் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த ஏரியைச் சுற்றியுள்ள வைரிச் செட்டிபாளையம், கோட்டப்பாளையம் வளையப்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகள் சீரக சம்பா நெல் நடவு செய்துள்ளனர் .ஆவணி மாதத்தில் ஜம்பேரி நிரம்பி வழிந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் செய்திகள்
திருச்சியில் எல்ஐசி முகவர்கள் தொடர் போராட்டம்
நுகர்பொருள் வாணிபக்கழக தொழிலாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
கூட்டுறவு சிக்கன கடன் சங்க பேரவைக்கூட்டம் வரும் 9 ம்தேதி நடக்கிறது
வாழை கன்றுகளை கையில் ஏந்தி போராட்டம்: கலெக்டரிடம் கோரிக்கை
விவசாயிகள் குறைதீர் கூட்டம்; திருச்சி மாவட்டத்தில் யூரியா மற்றும் உரம் தட்டுபாடில்லாமல் வழங்க வேண்டும்
மாநகரின் 65 வார்டுகளுக்கும் புதிய சாலை மேம்பாட்டு திட்ட பணிகளுக்கு ரூ.60 கோடி நிதி ஒதுக்கீடு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!