அரியலூரில் தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் 5 பவுன் தங்கச்சங்கிலி பறிப்பு
8/27/2022 6:48:13 AM
அரியலூர், ஆக. 27: அரியலூரில் தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் 5 பவுன் செயின் பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். அரியலூர் நகரில் சஞ்சீவிராயன் கோயில் தெருவில் உள்ள வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த அரசு ஊழியர் பெண்ணிடம் 5 பவுன் நகைகளை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். அரியலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே வசித்து வருபவர் ராமலிங்கம் மனைவி புஷ்பலதா (45). இவர், அரியலூரில் உள்ள அரசு கூட்டுறவு மருந்தகத்தில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் குடும்பத்தினருடன் புஷ்பலதா தூங்கியுள்ளார். நேற்று அதிகாலை 3 மணியளவில் வீட்டினுள் நுழைந்த மர்மநபர், பூஜை அறையில் இருந்த 1 கிராம் தங்கக்காசு மற்றும் ரூ.20,000 பணத்தை திருடிக்கொண்டு, தூங்கி கொண்டிருந்த புஷ்பலதா கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் செயினை பறித்து கொண்டு தப்பி ஓடியுள்ளார். புஷ்பலதா எழுவதற்குள் மர்மநபர் தப்பித்துள்ளார். இதுகுறித்து, புஷ்பலதா கொடுத்த புகாரின் பேரில், அரியலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30,000 இழப்பீடு வழங்க வேண்டும்
விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தல் காந்திஜெயந்தி, மிலாடிநபி அக்.2, 9ம்தேதி மதுக்கடைகள் இயங்காது
சான்றிதழுக்கு விண்ணப்பிக்க பொது இ-சேவை மையங்களை பொதுமக்கள் அணுகலாம்
அரியலூர் மாவட்டத்தில் மதுக்கடைகளுக்கு 2, 9ம்தேதி விடுமுறை
அரியலூர் மாவட்டத்தில் நாளை நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் மக்கள் பங்கேற்க அழைப்பு
பெரம்பலூர் நகராட்சி அலுவலர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!