அசூர் கிராமத்தில் மின்னல் தாக்கி ஒருவர் ஏரியில் விழுந்து பலி
8/27/2022 6:47:11 AM
குன்னம், ஆக. 26: அசூர் கிராமத்தில் மின்னல் தாக்கி ஒருவர் ஏரியில் விழுந்து பலியானார். மற்றொருவர் படுகாயமடைந்தார். பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், அசூர் கிராமத்தை சேர்ந்த ஊராட்சி கிளார்க் மகன் ராஜேந்திரன் மகன் ரஞ்சித்குமார் (21), தாண்டமுத்து மகன் சின்னு(என்கிற) மேகநாதன் (21) இருவரும் நேற்று மதியம் 2மணியளவில் மீன் பிடிப்பதற்காக அசூர் - ஆய்குடி இடையே உள்ள ஏரிக்கு சென்று மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது மாலை 5 மணி அளவில் இடியுடன் கூடிய மழை பெய்தது. ரஞ்சித்குமார், மேகநாதன் 2 பேர் மீதும் இடி மற்றும் மின்னல் தாக்கியதில் மேகநாதன் படுகாயம் அடைந்தார். ரஞ்சித்குமார் மின்னல் தாக்கியதில் ஏரியில் மூழ்கி விட்டார். இதையடுத்து ரஞ்சித் குமாரை பொதுமக்கள் மற்றும் தீயணைப்பு துறையினர் சுமார் ஐந்து மணி நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு ஏரியில் இருந்து உயிரிழந்த ரஞ்சித் குமார் உடலை மீட்டனர். காயமடைந்த மேகநாதன் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தகவல் அறிந்த வருவாய் மற்றும் குன்னம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகள்
மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30,000 இழப்பீடு வழங்க வேண்டும்
விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தல் காந்திஜெயந்தி, மிலாடிநபி அக்.2, 9ம்தேதி மதுக்கடைகள் இயங்காது
சான்றிதழுக்கு விண்ணப்பிக்க பொது இ-சேவை மையங்களை பொதுமக்கள் அணுகலாம்
அரியலூர் மாவட்டத்தில் மதுக்கடைகளுக்கு 2, 9ம்தேதி விடுமுறை
அரியலூர் மாவட்டத்தில் நாளை நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் மக்கள் பங்கேற்க அழைப்பு
பெரம்பலூர் நகராட்சி அலுவலர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!
உக்ரைனில் ஹெலிகாப்டர் விழுந்து நொருங்கியதில் உள்துறை அமைச்சர் உட்பட 16 பேர் உயிரிழப்பு..!!